இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

எங்களது வேலை இன்னும் முடியவில்லை; டி20 தொடரை வென்ற பிறகு ஷுப்மன் கில் பேச்சு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது மகிழ்ச்சியளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

News image

படம் | பிசிசிஐ

Updated On :13 ஜூலை 2024, 9:46 pm IST

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது மகிழ்ச்சியளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது மகிழ்ச்சியளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நாங்கள் சேஸிங்கில் சரியாக விளையாடவில்லை. இந்தப் போட்டியில் சேஸிங்கில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், எங்களது வேலை இன்னும் முடிந்துவிடவில்லை. இந்த அணி மிகச் சிறந்த அணி. அணியில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். இந்த அணி தொடர்ந்து பல வெற்றிகளைப் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அணியில் எந்தவொரு மாற்றம் செய்வது குறித்தும் பயிற்சியாளருடன் பேசவில்லை. அணியில் மாற்றமிருப்பின் நாளை போட்டிக்கு முன்னதாக தெரியப்படுத்துவேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.