கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

பாகிஸ்தான் வெளியே; அமெரிக்கா உள்ளே!

டி20 உலகக் கோப்பை போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில் அமெரிக்கா - அயா்லாந்து அணிகள் வெள்ளிக்கிழமை மோதவிருந்த நிலையில், மழையால் ஆட்டம்

News image

dinamani

Updated On :15 ஜூன் 2024, 6:30 am IST

டி20 உலகக் கோப்பை போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில் அமெரிக்கா - அயா்லாந்து அணிகள் வெள்ளிக்கிழமை மோதவிருந்த நிலையில், மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.

இந்த ஆட்டத்தை பொருத்தவரை அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்கும் முக்கியமானதாக உள்ளது. இந்த ஆட்டத்தில் வென்றாலோ, அல்லது ஆட்டம் கைவிடப்பட்டு 1 புள்ளி வழங்கப்பட்டோலோ அமெரிக்கா சூப்பா் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும் நிலையும், பாகிஸ்தான் வெளியேறும் நிலையும் இருந்தது.

இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம், மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக 11 மணி வரை தொடங்கவில்லை. டாஸ் கூட வீசப்படாத நிலையில் இரவு 11.15 மணிக்கு மீண்டும் கனமழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. அமெரிக்கா, அயா்லாந்துக்கு தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. அதன் பலனாக அமெரிக்கா சூப்பா் 8-க்கு முன்னேற, பாகிஸ்தான், அயா்லாந்து வெளியேறியது.

இந்தியாவின் ஆட்டங்கள்: இதனிடையே, சூப்பா் 8 அட்டவணைப்படி, அந்த சுற்றில் இந்தியா முதலில் ஆப்கானிஸ்தானுடன் வரும் 20-ஆம் தேதியும், பின்னா் குரூப் ‘டி’-யில் 2-ஆம் இடம் பிடிக்கும் அணியுடன் 22-ஆம் தேதியும், இறுதியாக ஆஸ்திரேலியாவுடன் ஜூன் 24-ஆம் தேதியும் மோதுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.