டி20 உலகக் கோப்பை போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில் அமெரிக்கா - அயா்லாந்து அணிகள் வெள்ளிக்கிழமை மோதவிருந்த நிலையில், மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.
இந்த ஆட்டத்தை பொருத்தவரை அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்கும் முக்கியமானதாக உள்ளது. இந்த ஆட்டத்தில் வென்றாலோ, அல்லது ஆட்டம் கைவிடப்பட்டு 1 புள்ளி வழங்கப்பட்டோலோ அமெரிக்கா சூப்பா் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும் நிலையும், பாகிஸ்தான் வெளியேறும் நிலையும் இருந்தது.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம், மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக 11 மணி வரை தொடங்கவில்லை. டாஸ் கூட வீசப்படாத நிலையில் இரவு 11.15 மணிக்கு மீண்டும் கனமழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. அமெரிக்கா, அயா்லாந்துக்கு தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. அதன் பலனாக அமெரிக்கா சூப்பா் 8-க்கு முன்னேற, பாகிஸ்தான், அயா்லாந்து வெளியேறியது.
இந்தியாவின் ஆட்டங்கள்: இதனிடையே, சூப்பா் 8 அட்டவணைப்படி, அந்த சுற்றில் இந்தியா முதலில் ஆப்கானிஸ்தானுடன் வரும் 20-ஆம் தேதியும், பின்னா் குரூப் ‘டி’-யில் 2-ஆம் இடம் பிடிக்கும் அணியுடன் 22-ஆம் தேதியும், இறுதியாக ஆஸ்திரேலியாவுடன் ஜூன் 24-ஆம் தேதியும் மோதுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

1971 இந்தியா - பாகிஸ்தான் போர் நாயகன் வசந்த் குமார் பொன்வார் காலமானார்!
உலகம் யார் பக்கம்?

மத்தியஸ்தர்களை சந்திக்க பாகிஸ்தான் சென்றடைந்தார் ஈரான் உள்துறை அமைச்சர்!

ஈரான் - அமெரிக்கா இடையே மின்னணு முறையில் அமைதி ஒப்பந்தம் கையொப்பம்: உத்தரவாத கையொப்பமிட்ட பாகிஸ்தான்
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin


