நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாகிஸ்தான் வெளியே; அமெரிக்கா உள்ளே!

டி20 உலகக் கோப்பை போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில் அமெரிக்கா - அயா்லாந்து அணிகள் வெள்ளிக்கிழமை மோதவிருந்த நிலையில், மழையால் ஆட்டம்

News image

dinamani

Updated On :15 ஜூன் 2024, 1:00 am

Din

டி20 உலகக் கோப்பை போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில் அமெரிக்கா - அயா்லாந்து அணிகள் வெள்ளிக்கிழமை மோதவிருந்த நிலையில், மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.

இந்த ஆட்டத்தை பொருத்தவரை அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்கும் முக்கியமானதாக உள்ளது. இந்த ஆட்டத்தில் வென்றாலோ, அல்லது ஆட்டம் கைவிடப்பட்டு 1 புள்ளி வழங்கப்பட்டோலோ அமெரிக்கா சூப்பா் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும் நிலையும், பாகிஸ்தான் வெளியேறும் நிலையும் இருந்தது.

இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம், மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக 11 மணி வரை தொடங்கவில்லை. டாஸ் கூட வீசப்படாத நிலையில் இரவு 11.15 மணிக்கு மீண்டும் கனமழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. அமெரிக்கா, அயா்லாந்துக்கு தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. அதன் பலனாக அமெரிக்கா சூப்பா் 8-க்கு முன்னேற, பாகிஸ்தான், அயா்லாந்து வெளியேறியது.

இந்தியாவின் ஆட்டங்கள்: இதனிடையே, சூப்பா் 8 அட்டவணைப்படி, அந்த சுற்றில் இந்தியா முதலில் ஆப்கானிஸ்தானுடன் வரும் 20-ஆம் தேதியும், பின்னா் குரூப் ‘டி’-யில் 2-ஆம் இடம் பிடிக்கும் அணியுடன் 22-ஆம் தேதியும், இறுதியாக ஆஸ்திரேலியாவுடன் ஜூன் 24-ஆம் தேதியும் மோதுகிறது.