நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற கோல்ஃப் வீரர், வீராங்கனைகள்!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு கோல்ஃப் பிரிவில் இந்தியா சார்பில் 4 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க தகுதிபெற்றுள்ளனர்.

News image
Updated On :18 ஜூன் 2024, 7:15 pm IST

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு கோல்ஃப் பிரிவில் இந்தியா சார்பில் 4 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க தகுதிபெற்றுள்ளனர்.

நடப்பாண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரீஸ் நகரில் ஜூலை 26ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் ஆண்கள் பிரிவில் ஆகஸ்ட் 1 முதல் 4ஆம் தேதி வரையிலும், பெண்கள் பிரிவில் ஆகஸ்ட் 7 முதல் 10ஆம் தேதி வரையும் கோல்ஃப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள வீரர்கள் குறித்த அறிவிப்பை சர்வதேச கோல்ஃப் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆண்கள் பிரிவில் ககன்ஜீத் புல்லார், சுபாங்கர் சர்மா ஆகியோரும் பெண்கள் பிரிவில் அதிதி அசோக், தீக்‌ஷா தாகர் ஆகியோரும் தகுதி பெற்றுள்ளனர்.

ஒலிம்பிக் தரவரிசையில் சுபாங்கர் சர்மா 48வது இடத்திலும், ககன்ஜீத் புல்லார் 54வது இடத்திலும் உள்ளார். இதேபோன்று அதிதி 24வது இடத்திலும், தீக்‌ஷா 40வது இடத்திலும் உள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அதிதி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.