தமிழக வீரர் ரவி அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் ஜாலியான பதிவினை கிண்டல் செய்துள்ளார்.
100 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ள அஸ்வின் சமீபத்தில் 500 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். தற்போது ஐசிசி பௌலிங் டெஸ்ட் தரவரிசையில் 870 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
ராஜ்கோட் டெஸ்டில் இருக்கும்போது அஸ்வின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை சந்திக்க அவசரமாக கிளம்பினார். அம்மாவைப் பார்க்க சென்றபோது, “நீ இங்க என்னடா பண்ற, ஏன் டெஸ்ட் மேட்ச் விட்டு வந்த?” எனக் கேட்டுள்ளார்.
ஒரு முறை தினேஷ் கார்த்திக், “அஸ்வின் அம்மா அளவுக்கு கிரிக்கெட் அறிவு யாருக்கும் கிடையாது. எனது அம்மாவை விடவும் அவருக்கு அதிகமாகத் தெரியும். அவர்கள் சாதாராணமாகவே நீ ஏன்டா இன்னைக்கு கேரம் பால் போடலை என்றும், நீ ஏன் இன்னும் ஸ்லோயரா ஸ்பின் பண்ணியிருக்கலாமே எனப் பேசுவார்கள். எனக்கு ஆச்சரியமாக இருக்கும் அவர்களைப் பார்க்க” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் 2011இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 128 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் எடுத்திருப்பார். தற்போது முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 5வது போட்டியிலும் 128க்கு 9 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியிருந்தார். இதனை எடிட் செய்து பதிவிட்டிருந்தார்.
No improvement after all these years of playing the game.
— Ashwin ð®ð³ (@ashwinravi99) March 13, 2024
âOnly my mom can say things like thisâ ððâ¤ï¸ https://t.co/UKEN8kovLX
இந்தப் பதிவினை அஸ்வின் பகிர்ந்து, “இத்தனை வருடமாக விளையாடி ஒரு முன்னேற்றமும் இல்லை என்பதுபோல எனது அம்மா கூறுவார்” என ஜாலியாக பதிவிட்டுள்ளார்.
மேலும் இன்னொரு ரசிகர் ஒருவர், “எனது அம்மா நேர்மறையானவர். குழந்தை இத்தனை வருஷமாக மாறவே இல்லை. அப்படியே இருக்கான்” எனப் பதிவிட்டதை அஸ்வின் மறுபதிவு செய்துள்ளார்.
My mom being the positive person she is, would have said, Kozhandhai ithanai varushathula maarave illai. Abdiye irukkaan ððð https://t.co/YXEZnmVTxv
— Athreyaa (@athreyaa) March 13, 2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய்யை தூக்கிப் பிடிப்பதில் கூட்டணி கட்சித் தலைவர்களிடையே சண்டை! அதிமுக கிண்டல்!
'56 வயது இளைஞர்' - ராகுலைக் கிண்டல் செய்த மோடி!

பைக்கில் வந்து மாணவிகளை கேலி செய்யும் இளைஞா்கள்: நடவடிக்கை எடுக்க செங்கம் மக்கள் கோரிக்கை

இங்கிலாந்து டெஸ்ட் பயிற்சியாளர் ஆகிறாரா அஸ்வின்?
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK





