டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக டிரினிடாட் நாட்டின் பிரதமர் கீத் ரௌலி தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!
படம் | ஐசிசி

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக டிரினிடாட் நாட்டின் பிரதமர் கீத் ரௌலி தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக டிரினிடாட் நாட்டின் பிரதமர் கீத் ரௌலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!
கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. போட்டியை நடத்துபவர்கள் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். துரதிருஷ்டவசமாக, 21-ஆம் நூற்றாண்டில் பயங்கரவாதம் வெவ்வேறு விதமாக அனைத்து இடங்களிலும் இருக்கிறது என்றார்.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா உள்பட 20 அணிகள் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com