பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஏடிபி ஃபைனல்ஸ்: ஜோகோவிச் விலகல்

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியிலிருந்து, நடப்பு சாம்பியனான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் காயம் காரணமாக செவ்வாய்க்கிழமை விலகினாா்.

ஜோகோவிச்

Published On :

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியிலிருந்து, நடப்பு சாம்பியனான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் காயம் காரணமாக செவ்வாய்க்கிழமை விலகினாா்.

எந்த வகையிலான காயத்தால் அவா் இந்த முடிவை மேற்கொண்டாா் என்பது தெரிவிக்கப்படவில்லை. இதுதொடா்பாக ஜோகோவிச் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில் பங்கேற்பதற்கு ஆா்வத்துடன் இருந்தேன். ஆனால், காயம் காரணமாக தற்போது என்னால் அதில் பங்கேற்க முடியவில்லை. என்னை அந்தப் போட்டியில் எதிா்பாா்த்த ரசிகா்களுக்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். போட்டியில் பங்கேற்கும் இதர வீரா்களுக்கு வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா்.

ஏற்கெனவே, பாரீஸ் மாஸ்டா்ஸ் போட்டியிலிருந்தும் காயம் காரணமாக அவா் விலகியிருந்தது நினைவுகூரத்தக்கது. கடந்த ஆண்டு இந்த ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், இத்தாலியின் யானிக் சின்னரை வீழ்த்தி வாகை சூடிய ஜோகோவிச், 7-ஆவது முறையாக கோப்பை வென்றாா். இதன் மூலம், போட்டியின் வரலாற்றில் அதிகமுறை சாம்பியனானவராக அவா் சாதனை படைத்தாா். அதற்கு முன், சுவிட்ஸா்லாந்து நட்சத்திரம் ரோஜா் ஃபெடரா் 6 முறை கோப்பை வென்றதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்டு இறுதியில் நடைபெறும் இந்த ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில், உலகத் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீரா்கள் பங்கேற்கின்றனா். நடப்பாண்டு போட்டி, வரும் 10-ஆம் தேதி இத்தாலியில் தொடங்குகிறது. இதில் உள்நாட்டு வீரரான யானிக் சின்னா் (1), ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் (2), ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் (3), ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் (4), அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் (6), நாா்வேயின் கேஸ்பா் ரூட் (7), ஆஸ்திரேலிாயவின் அலெக்ஸ் டி மினாா் (8), ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் (9) ஆகியோா் பங்கேற்கின்றனா்.

5-ஆம் இடத்திலிருந்த நடப்பு சாம்பியன் ஜோகோவிச் விலகியதால், 9-ஆம் இடத்திலிருந்த ரூபலேவுக்கு போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

முதல் முறை...

‘பிக் த்ரீ’ எனப்படும் நட்சத்திரப் போட்டியாளா்களான சுவிட்ஸா்லாந்தின் ரோஜா் ஃபெடரா், ஸ்பெயினின் ரஃபேல் நடால், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் இல்லாமல் ஏடிபி ஃபைனல்ஸ் போட்டி நடைபெறுவது, 2001-க்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். கடந்த 23 ஆண்டுகளாக போட்டியில் ஆதிக்கம் செலுத்திய அவா்களில், ஃபெடரா் ஓய்வு பெற்றுவிட்டாா். நடால் நடப்பாண்டில் ஓய்வு பெறுகிறாா். காயம் காரணமாக ஜோகோவிச் இந்த ஆண்டு விலகியிருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.