ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய மகளிரணி அபாரம்!

உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய மகளிரணி அபார வெற்றி பெற்றது.

News image
வெற்றிக் களிப்பில் இந்திய மகளிர்- பிடிஐ
Updated On :6 அக்டோபர் 2024, 2:00 pm

DIN

உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிரணி அபார வெற்றி பெற்றது.

முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் மோசமான தோல்வியை தழுவிய நிலையில், இன்று பாகிஸ்தானை வீழ்த்தி தனது வெற்றிக் கணக்கை இந்திய மகளிரணி தொடங்கியுள்ளது.

மகளிர் டி - 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மற்றும் துபையில் நடைபெற்று வருகிறது.

துபை சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் ஆடியது. இந்திய மகளிரின் அபார பந்துவீச்சால், தொடக்க ஆட்டக்காரர்களான மூபீனா அலி - குல் ஃபெரோசா சொற்ப ரன்களில் வெளியேறினர். அதற்கடுத்து வந்த வீராங்கனைகளும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர்.

முபீனா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், நிடா தார் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதுவே பாகிஸ்தான் மகளிர் அடித்த அதிகபட்ச ரன்களாகும். அதற்கடுத்து வந்த வீராங்கனைகளான அலியா ரியாஸ், ஃபாத்திமா சனா, தூபா ஹாசன், சைதா அரோப் ஷா, நஷ்ரா சாந்து ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிரணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரராக ஷபாலி வர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 7 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தாலும், அதற்கடுத்து வந்த ஜெமிமாவும் (23), கேப்டன் ஹர்மன் பிரீத் கெளரும் (29) ஜோடி சேர்ந்து ரன்களைச் சேர்த்தனர்.

ரிச்சா கோஷ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த தீப்தி சர்மா - சஞ்சனாவுடன் சேர்ந்து ஆட்டத்தை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றனர்.

18.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டி-20 தொடரில் தனது முதல் வெற்றிக் கணக்கை இந்திய மகளிரணி தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.