கிரெஜ்சிகோவா, மாயா முன்னேற்றம்


சீனாவில் நடைபெறும் நிங்போ ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவா, பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டட் மாயா ஆகியோா் காலிறுதிக்கு தகுதிபெற்றனா்.
மகளிா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் கிரெஜ்சிகோவா 7-6 (7/5), 6-3 என்ற நோ் செட்களில் சீனாவின் யெஸின் மாவை வெளியேற்றினாா். 6-ஆம் இடத்திலிருக்கும் மாயா 7-6 (7/2), 7/5 என்ற கணக்கில் பிரிட்டனின் கேட்டி போல்டரை தோற்கடித்தாா்.
7-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் அனா கலின்ஸ்கயா 6-3, 6-3 என, சீனாவின் யு யுவானை எளிதாகச் சாய்த்தாா். செக் குடியரசின் கரோலின் முசோவா 6-2, 6-1 என்ற செட்களில் ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனை வீழ்த்தினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...