செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்! விராட் கோலி புதிய சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி.

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி - பிடிஐ

Published On :30 செப்டம்பர் 2024, 5:15 pm IST

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 27,000 ரன்களைக் கடந்த 4வது வீரர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்று (செப். 30) படைத்தார்.

இதற்கு முன்பு சச்சின் தெண்டுல்கர் 623 இன்னிங்சில் 27 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கைத் தொட்டார். தற்போது விராட் கோலி வெறும் 594 இன்னிங்சில் அதிவேகமாக 27 ஆயிரம் ரன்களை கடந்து அசத்தியுள்ளார். 27 ஆயிரம் ரன்களைக் கடந்ததில் சச்சின் சாதனையையே கோலி முந்தியுள்ளார்.

இதன்மூலம் 27 ஆயிரம் ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையும் விராட் கோலிக்கு சொந்தமாகியுள்ளது.

இதற்கு முன்பு, இலங்கை வீரர் குமார் சங்கக்கார 666 இன்னிங்சில் 28,016 ரன்கள் எடுத்திருந்தார்.

ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் 668 இன்னிங்சில்27,483 ரன்கள் சேர்த்திருந்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடி வரும் டெஸ்ட் போட்டியில் 47 ரன்களை எடுத்தபோது, இந்தச் சாதனைப் பட்டியலில் விராட் கோலி இடம்பெற்றார்.

இதேபோன்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 9,000 ரன்களைக் கடந்து விராட் கோலி மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார்.

ராகுல் திராவிட், சச்சின் தெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் ஆகிய வீரர்களைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களை எடுத்த வீரராக விராட் கோலி இணைந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.