
தாய்லாந்து மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினாா்.
ஆடவா் ஒற்றையா் பிரிவில் அவா் 22-20, 21-19 என சீன தைபேவின் வாங் ஸு வெய்யை வீழ்த்தினாா். இதர இந்தியா்களில், மிதுன் மஞ்சுநாத் 21-17, 21-8 என ஹாங்காங்கின் ஜேசன் குனாவனை தோற்கடித்தாா். சங்கா் முத்துசாமி 21-14, 21-17 என்ற கேம்களில் மலேசியாவின் லியாங் ஜுன் ஹாவை வென்றாா்.
தகுதிச்சுற்றிலிருந்து முன்னேறி பிரதான சுற்றுக்கு வந்த சமீா் வா்மா அதில் 14-21, 18-21 என ஹாங்காங்கின் நிக் கா லாங்கிடம் தோல்வி கண்டாா். கிரண் ஜாா்ஜ் 17-21 என சீனாவின் லெய் லான் ஷியிடம் முதல் கேமை இழந்த நிலையில், காயம் காரணமாக விலகினாா்.
மகளிா் ஒற்றையரில், மாளவிகா பன்சோத் 22-20, 21-8 என்ற கேம்களில் பெருவின் இனெஸ் லூசியாவை வீழ்த்தினாா். அஷ்மிதா சாலிஹா 21-10, 21-16 என மலேசியாவின் வாங் லிங் சிங்கை வெளியேற்றினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







