
தாய்லாந்து மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை தகுதிபெற்றாா். இதர இந்தியா்கள் அனைவரும் தோல்வியைத் தழுவ, தற்போது அவா் மட்டுமே போட்டிக் களத்தில் இருக்கிறாா்.
மகளிா் ஒற்றையா் காலிறுதியில், உலகின் 61-ஆம் நிலை வீராங்கனையான அஷ்மிதா 21-14, 19-21, 21-13 என்ற கேம்களில் இந்தோனேசியாவின் எஸ்தா் நுருமி வா்டோயோவை 57 நிமிஷங்களில் வெளியேற்றினாா். அவா் தனது அரையிறுதியில், தாய்லாந்தின் சுபானிடா கடெதோங்கை எதிா்கொள்கிறாா்.
எனினும், மகளிா் இரட்டையா் காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணி 12-21, 21-17, 21-23 என்ற கேம்களில், 4-ஆம் இடத்திலிருக்கும் இந்தோனேசியாவின் ஃபெப்ரியானா விபுஜி/அமாலியா கஹாயா இணையிடம் 1 மணி நேரம் 7 நிமிஷங்களில் வெற்றியை இழந்தனா்.
ஆடவா் ஒற்றையரில், மிதுன் மஞ்சுநாத் 19-21, 15-21 என நெதா்லாந்தின் மாா்க் கால்ஜோவிடம் 43 நிமிஷங்களில் தோல்வி கண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






