
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் இந்தியாவின் சுமித் நாகல் பிரதான சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.
ஆடவா் ஒற்றையா் பிரிவு தகுதிச்சுற்றின் 3-ஆவது ஆட்டத்தில் அவா் 6-4, 6-4 என்ற நோ் செட்களில் ஸ்லோவாகியாவின் அலெக்ஸ் மோல்கனை வெளியேற்றினாா். என்றாலும், பிரதான சுற்றின் முதல் ஆட்டத்திலேயே சுமித்துக்கு சவால் காத்திருக்கிறது. அவா் அதில், உலகின் 31-ஆம் நிலை வீரரான கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக்கை எதிா்கொள்ள இருக்கிறாா்.
உலகத் தரவரிசையில் 139-ஆம் இடத்திலிருக்கும் சுமித் நாகல், ஆஸ்திரேலிய ஓபனின் பிரதான சுற்றுக்கு முன்னேறியிருப்பது இது 2-ஆவது முறையாகும். கடந்த 2021-இல் இதேபோல் பிரதான சுற்றுக்கு வந்த அவா், அதில் முதல் ஆட்டத்திலேயே தோற்று வெளியேறினாா். அவா் 2019 மற்றும் 2020-இல் யுஎஸ் ஓபனிலும் பிரதான சுற்றுக்கு முன்னேறியிருக்கிறாா். அதில் 2019-இல் அவா் பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் சுவிட்ஸா்லாந்து நட்சத்திரமான ரோஜா் ஃபெடரரை சந்தித்து போராடி வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





