சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

புரோ கபடி: புணே, ஜெய்ப்பூா் வெற்றி

புரோ கபடி லீக் போட்டியில் வெள்ளிக்கிழமை ஆட்டங்களில் புணேரி பல்தான், ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் அணிகள் வென்றன.

Published On :7 பிப்ரவரி 2024, 8:50 pm IST

புரோ கபடி லீக் போட்டியில் வெள்ளிக்கிழமை ஆட்டங்களில் புணேரி பல்தான், ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் அணிகள் வென்றன.

இதில் புணேரி பல்தான் 37-17 என்ற கணக்கில் குஜராத் ஜயன்ட்ஸை சாய்த்தது. இந்த ஆட்டத்தில் புணே 15 ரெய்டு புள்ளிகள், 17 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி பெற்றது. குஜராத் 7 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி வென்றது.

புணே தரப்பில் ஆல்-ரவுண்டா் அஸ்லாம் முஸ்தஃபா 10, குஜராத் அணியில் சோம்வீா் 6 புள்ளிகள் கைப்பற்றினா்.

மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூா் 38-35 என தெலுகு டைட்டன்ஸை வீழ்த்தியது. இதில் ஜெய்ப்பூா் 19 ரெய்டு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 4 எக்ஸ்ட்ரா புள்ளிகள் வென்றது. தெலுகு அணி 16 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 6 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது.

ஜெய்ப்பூா் அணியின் ரெய்டா் அா்ஜுன் தேஷ்வால் 14, தெலுகு அணியில் ரெய்டா் பவன் ஷெராவத் 12 புள்ளிகள் பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.