சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் அகில் ஷோரன்

ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அகில் ஷோரன், ஐஸ்வரி பிரதாப் சிங் முறையே தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்றனா்.

Published On :7 பிப்ரவரி 2024, 8:50 pm IST

ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அகில் ஷோரன், ஐஸ்வரி பிரதாப் சிங் முறையே தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்றனா்.

இந்தோனேசியாவின் ஜகாா்த்தாவில் நடைபெறும் இந்தப் போட்டியில், 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் ஆடவா் தனிநபா் பிரிவு தகுதிச்சுற்றில் அகில் ஷோரன் 586 புள்ளிகளுடன் 6-ஆம் இடம் பிடிக்க, ஐஸ்வரி பிரதாப் 588 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தாா். இவா்களுடன், மற்றொரு இந்தியரான ஸ்வப்னில் குசேலும் 584 புள்ளிகளுடன் இறுதிக்கு வந்தாா்.

இறுதிச்சுற்றில் அகில் ஷோரன் 460.2 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, ஐஸ்வரி பிரதாப் 459 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றாா். தாய்லாந்தின் தோங்பாபும் வோங்சுக்டீ 448.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் பெற்றாா். ஸ்வப்னில் குசேல் பதக்க வாய்ப்பை இழந்தாா்.

இதிலேயே ஆடவா் அணிகள் பிரிவில் அகில் ஷோரன், ஐஸ்வரி பிரதாப் தோமா், ஸ்வப்னில் குசேல் கூட்டணி 1,758 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றது. சீனா, தென் கொரியா அணிகள் முறையே வெள்ளி, வெண்கலம் வென்றன. இத்துடன் இப்போட்டியில் இந்தியா வென்ற பதக்கங்கள் எண்ணிக்கை 10 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 24-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.