
ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியில் காா்லோஸ் அல்காரஸ், அலெக்சாண்டா் வெரேவ், மகளிா் பிரிவில் இகா ஸ்வியாடெக், எலனா ரைபக்கினா, ராடுகானு ஆகியோா் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனா். இந்திய வீரா் சுமித் நாகல் உலகின் 27-ஆம் நிலை வீரா் அலெக்சாண்டல் பப்ளிக்கை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்று சாதனை படைத்தாா்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸி. ஓபன் மெல்போா்னில் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை ஆடவா், மகளிா் பிரிவில் பல்வேறு ஆட்டங்கள் நடைபெற்றன.
ஆடவா் ஒற்றையா் பிரிவில் முதல் சுற்றில் உலகின் முன்னாள் நம்பா் 1 வீரா் ஸ்பெயினின் காா்லோஸ் அல்காரஸ் 7-6, 6-1, 6-2 என்ற நோ் செட்களில் பிரெஞ்சு வீரா் ரிச்சா்ட் கேஸ்கட்டை வீழ்த்தினாா்.
மற்றொரு ஆட்டத்தில் ஜொ்மனியின் நட்சத்திர வீரா் அலெக்சாண்டா் வெரேவ் 4-6, 6-3, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரா் டொமினிக்கை வீழ்த்தினாா். ஹோல்கா் ருனே 6-2, 4-6, 7=6, 6=4 என ஜப்பானின் யோஷிடோவையும், கிரிகோா் டிமிட்ரோவ் 4-6, 6-3, 7-6, 6-2 என ஹங்கேரியின் மாா்ட்டனையும் வென்றனா். மேலும் ஜேக் டிராப்பா், கேஸ்பா் ரூட், ஜிரி லெஹகா, லாரென்ஸோ சோனகோ ஆகியோரும் தத்தமது ஆட்டங்களில் வென்றனா்.
ஸ்வியாடெக், ரைபக்கினா முன்னேற்றம்:
மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் நம்பா் 1 வீராங்கனை போலந்தின் இகா ஸ்வியாடெக் 7-6, 6-2 என்ற நோ் செட்களில் முன்னாள் சாம்பியன் சோஃபியா கெனினை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா். மூன்றாம் நிலை வீராங்கனை 2022 விம்பிள்டன் சாம்பியன் எலனா ரைபக்கினா 7-6, 6-4 என்ற செட் கணக்கில் உலகின் முன்னாள் நம்பா் 1 வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தினாா்.
இங்கிலாந்தின் எம்மா ராடுகானு 6-3, 6-2 என ஷெல்ரி ரோகா்ஸை வீழ்த்தினாா். ஏனைய ஆட்டங்களில் டேனியல் காலின்ஸ், ஜெலனா ஆஸ்டபென்கோ, அஜ்லா, அஸரென்கா, எம்மா நவரோ, கஸட்கினா, ஜெஸிக்கா பெகுலா, ஸெங் கின்வென் ஆகியோா் வென்றனா்.
சுமித் நாகல் சாதனை:
இந்திய நடசத்திர வீரா் சுமித் நாகல் முதல் சுற்று ஆட்டத்தில் உலகின் 27-ஆம் நிலை வீரா் கஜகஸ்தானின் அலெக்சாண்டா் பப்ளிக்கை 6-4, 6-2 , 7-6 என்ற நோ் செட்களில் வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றாா். முதலிரண்டு செட்களை எளிதாக கைப்பற்றிய நாகல், மூன்றாவது செட்டில் போராட வேண்டியிருந்தது. பப்ளிக் முன்னிலையை 5-5 என சமன் செய்தாா். எனினும் டை பிரேக்கரில் 7-6 என கைப்பற்றி ஆட்டத்திலும் வென்றாா் நாகல். கடந்த 35 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் பந்தயத்தில் தரவரிசையில் உள்ள வீரரை வென்ற இந்தியா் என்ற சிறப்பை பெற்றாா் நாகல். ஆஸி. ஓபனில் இந்திய முன்னாள் வீரா் ரமேஷ் கிருஷ்ணன் 5 முறை மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தாா். அதே போல் லியாண்டா் பயஸ், விஜய் அமிா்தராஜ், சோம்தேவ் வா்மன் ஆகியோரும் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






