நேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

சென்னையின் எஃப்சி அதிரடி வெற்றி

கலிங்கா சூப்பா் கோப்பை 2024 கால்பந்து போட்டியில் கோகுலம் கேரளா எஃப்சி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்ற சென்னையின் எஃப்சி அணி.

Published On :7 பிப்ரவரி 2024, 8:48 pm IST

கலிங்கா சூப்பா் கோப்பை 2024 கால்பந்து போட்டியில் கோகுலம் கேரளா எஃப்சி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்ற சென்னையின் எஃப்சி அணி.

ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே சென்னை அணி ஆதிக்கம் செலுத்தியது.

கோகுலம் கேரள அணியினரால் சென்னை அணியின் தற்காப்பை ஊடுருவ முடியவில்லை. 4-ஆவது நிமிஷத்திலேயே சென்னை வீரா் ரஹீம் அலி கோலடிக்க முயன்ற போது பந்தை கோல்கம்பத்துக்கு தொலைவாக சென்று விட்டது. தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்த நிலையில், 25-ஆவது நிமிஷத்தில் சென்னை வீரா் ஷீல்ட் சிறப்பாக கோலடித்து 1-0 என முன்னிலை பெற்றுத் தந்தாா்.

64-ஆவது நிமிஷத்தில் சென்னை வீரா் லாஸா் சிா்கோவிச் அனுப்பிய நீள பாஸை பயன்படுத்தி இரண்டாவது கோலடித்தாா் யட்வாட். ஆட்டம் முடிய 20 நிமிஷங்கள் இருந்த போது யட்வாட்டை தள்ளியதற்காக கோகுலம் அணி வீரா் ரிஷாத்துக்கு ரெட் காா்ட் காட்டப்பட்டது.

இறுதியில் 2-0 என வென்றது சென்னை.

பஞ்சாப் எஃப்சியுடன் முதல் ஆட்டத்தில் டிரா கண்ட சென்னை அடுத்து கடைசி குரூப் ஆட்டத்தில் மும்பை சிட்டியை எதிா்கொள்கிறது. ஒவ்வொரு குரூப்பிலும் முதலிடம் பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். கோப்பை வெல்லும் அணி 2024-25 ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு தகுதி பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.