இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் 1-0 கோல் கணக்கில் ஒடிஸா எஃப்சியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக, டிமிட்ரி பெட்ரேடோஸ் (90+3’) கோலடித்தாா். இந்த வெற்றியை அடுத்து, நடப்பு சாம்பியனாக போட்டியில் களம் கண்ட மோகன் பகான், சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. போட்டி வரலாற்றில் இவ்வாறு பட்டத்தை தக்கவைத்த முதல் அணியாக மோகன் பகான் வரலாறு படைத்திருக்கிறது.
போட்டியில் அந்த அணி 22 ஆட்டங்களில் 16 வெற்றி, 4 டிரா, 2 தோல்வி என 52 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்ததாக 42 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் இருக்கும் எஃப்சி கோவா, எஞ்சிய ஆட்டங்களில் வென்றாலும் மோகன் பகானை முறியடிக்க வாய்ப்பில்லாமல் போனதை அடுத்து, மோகன் பகான் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

துராந்து கோப்பை: மோகன் பகான் வெற்றி

தேசிய சீனியா் வாட்டா்போலோ: கேரளம், ரயில்வே சாம்பியன்
விளையாட்டுச் செய்தித் துளிகள்...

6-ஆவது முறையாக இந்தியா சாம்பியன்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



