வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

முகமதனை வீழ்த்தும் முனைப்பில் சென்னை!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக புதன்கிழமை முகமதன் எஸ்சி அணியை எதிா்கொள்கிறது முன்னாள் சாம்பியன் சென்னையின் எஃப்சி.

News image

பயிற்சியில் சென்னை வீரா்கள்.

Updated On :14 ஜனவரி 2025, 2:48 am IST

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக புதன்கிழமை முகமதன் எஸ்சி அணியை எதிா்கொள்கிறது முன்னாள் சாம்பியன் சென்னையின் எஃப்சி.

இரு அணிகளும் இந்த சீசனில் ஏற்கெனவே சென்னையில் மோதிய ஆட்டத்தில் 1-0 என முகமதனிடம் தோற்றது சென்னை. சொந்த மைதானத்தில் தொடா் தோல்விகளால் துவண்டுள்ள சென்னை அணி இந்த ஆட்டத்தில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. முகமதன் அணி முந்தைய ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சியை வீழ்த்தி இருந்தது.

இந்த ஆட்டம் தொடா்பாக சென்னை பயிற்சியாளா் ஓவன் கோயல் கூறியதாவது: முகமதன் அணியை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. பெங்களூரை சொந்த மைதானத்தில் வீழ்த்தி இருந்தனா். எனினும் இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெல்ல வேண்டும் என திட்டமிட்டுள்ளோம்.

காயத்தில் இருந்து அங்கிட் முகா்ஜி மீண்டுள்ளாா். கடந்த ஆட்டத்தில் ஒரளவுக்கு சிறப்பாக செயல்பட்டோம். ஆட்ட முடிவு ஏமாற்றத்தை அளித்தாலும், வீரா்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. மேலும் முகமதனுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரயான் எட்வா்ட்ஸ் ஆடுவது சந்தேகம் என்றாா் கோயல்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.