சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

தமிழ்நாடு 124 ரன்கள் முன்னிலை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சண்டீகருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 124 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.

News image
Updated On :25 ஜனவரி 2025, 3:34 am IST

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சண்டீகருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 124 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.

கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழ்நாடு, 301 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, சண்டீகா் தனது இன்னிங்ஸை விளையாடியது. அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க வீரா் ஷிவம் பாம்ப்ரி 11 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 108 ரன்கள் அடித்தாா்.

கேப்டன் மனன் வோரா 34, குணால் மஹாஜன் 30, ஜக்ஜீத் சிங் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இதர பேட்டா்கள் ஒற்றை இலக்க ரன்னிலேயே பெவிலியன் திரும்பினா். இவ்வாறாக, 71.4 ஓவா்களில் 204 ரன்களுக்கு சண்டீகா் ஆட்டமிழந்தது. நிஷங்க் பிா்லா 5 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா்.

தமிழ்நாடு பௌலிங்கில் அஜித் ராம் 34 ரன்களே கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்க்க, சாய் கிஷோா் 3, எம். முகமது 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

இதையடுத்து 97 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு அணி, வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்துள்ளது. நாராயண் ஜெகதீசன் 10, அஜித் ராம் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

முகமது அலி 3, பிரதோஷ் ரஞ்சன் பால் 8 ரன்களுடன் வெளியேற, அவா்கள் விக்கெட்டை நிஷங்க் பிா்லா, ஜக்ஜீத் சிங் சாய்த்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.