உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலிதவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!பழனி செல்லும் பக்தர்களுக்கு ஜாக்பாட்! பல சேவைகளுக்கு முன்பதிவு வசதி தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு (ஜூலை 6, 2026) ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்
/

கிளப் உலகக் கோப்பை: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது செல்ஸி!

கிளப் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த செல்ஸி அணி குறித்து...

News image

வெற்றிக் களிப்பில் செல்ஸி அணியினர்... - படம்: எக்ஸ் / செல்ஸி எஃப்சி

Updated On :9 ஜூலை 2025, 4:20 pm IST

கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு 3-ஆவது முறையாக செல்ஸி அணி முன்னேறியது.

அமெரிக்காவின் மெட்லைஃப் திடலில் நடைபெற்ற அரையிறுதியில் ஃப்ளுமினென்ஸ், செல்ஸி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் செல்ஸி 2-0 என வென்றது.

செல்ஸி அணியின் ஜாவோ பெட்ரோ 18, 56-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்.

பிரேசிலைச் சேர்ந்த 23 வயதான ஜாவோ பெட்ரோ தனது சிறுவயதில் ஃப்ளுமினென்ஸ் அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் 53.6 சதவிகித பந்தினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த செல்ஸி 17 ஷாட்ஸ்களில் இலக்கை நோக்கி 5 முறை அடித்திருந்தது.

மாறாக, 12 ஷாட்ஸ்களில் 3 முறை மட்டுமே ஃப்ளுமினென்ஸ் இலக்கை நோக்கி அடித்தது.

முதல்பாதியில் 1-0 என செல்ஸி முன்னிலை வகித்தாலுமோ சுமாராகவே விளையாடியது. இரண்டாம் பாதியில் சிறப்பாக விளையாடி 3-ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

2012-இல் இறுதிப் போட்டியில் தோற்ற செல்ஸி 2021-இல் கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Chelsea advanced to the Club World Cup final for the third time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.