தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

17 ஆண்டுகளுக்குப் பின் கோப்பை வெல்ல காரணமான பயிற்சியாளரை நீக்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணியின் பயிற்சியாளர் நீக்கப்பட்டது குறித்து...

News image

ஏஞ்சலோஸ் ஆஞ்சே போஸ்டெகோக்லோ - படம்: எக்ஸ் / டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா்.

Updated On :7 ஜூன் 2025, 11:43 am IST

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணியின் பயிற்சியாளர் ஏஞ்சலோஸ் ஆஞ்சே போஸ்டெகோக்லோ நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யூரோப்பா லீக் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணி சமீபத்தில் கைப்பற்றியது.

40 ஆண்டுகளில் டாட்டன்ஹாம் அணி வென்ற முதல் ஐரோப்பிய கால்பந்து பட்டம் இதுவாகும். கடைசியாக 2008-இல் இங்கிலீஷ் லீக் கோப்பையையும், வென்றிருந்தது.

சுமார், 17 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றுகொடுத்த பயிற்சியாளரை நீக்கியது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் என்ன?

ப்ரீமியா் லீக் தொடரில் 22 போட்டிகளில் தோல்வியுற்றது 17-ஆவது இடத்தில் முடித்தது. இதனால், அந்த அணியின் உரிமையாளர் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் பிறந்த போஸ்டெகோக்லோ (59) டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணியில் 2023-இல் சேர்ந்தார்.

அடுத்ததாக இந்த அணிக்கு தாமஸ் பிராங்க் அல்லது மார்கோ சில்வாவை புதிய பயிற்சியாளராக நியமிக்க ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது.

அடுத்த (2025-26) சீசனில் சாம்பியன்ஸ் லீக்கிற்கு வாய்ப்பு கிடைத்ததால் அதை வெல்லும் முனைப்பில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணி இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.