மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

எகிப்திய அரசன் முகமது சாலா..! லிவர்பூல் அணிக்காக பல சாதனைகள்!

லிவர்பூல் கால்பந்து அணி வீரர் முகமது சாலா பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

News image

முகமது சாலா - படம்: ஏபி

Updated On :9 மார்ச் 2025, 12:07 pm IST

லிவர்பூல் கால்பந்து அணி வீரர் முகமது சாலா பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

பிரீமியர் லீக்கில் சவுத்தாம்ப்டன் கால்பந்து கிளப் உடன் லிவர்பூல் அணி நேற்றிரவு மோதியது. இந்தப் போட்டியில் லிவர்பூல் அணி 3-1 என வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முகமது சாலா பெனால்டி வாய்ப்பில் 2 கோல்களை அடித்து அசத்தினார். இதன்மூலம் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் முகமது சாலா.

கால்பந்து விளையாட்டில் மிகவும் பிரபலமான லிவர்பூல் அணிக்காக முகமது சாலா விளையாடி வருகிறார்.

முகமது சாலா படைத்த சாதனைகள்

எகிப்திய நாட்டைச் சேர்ந்த முகமது சாலாவுக்கு 32 வயதாகிறது. சவுத்தாம்ப்டன் உடன் 2 கோல்கள் அடித்ததன் மூலம் பிரீமியர் லீக்கில் அதிக கோல்கள் (184) அடித்தவர்கள் பட்டியலில் 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

லிவர்பூல் அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் 242 கோல்களுடன் 3ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

எகிப்திய அரசன்

லிவர் பூல் அணிக்காக ஒரு சீசனில் அதிக கோல்கள் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

27 கோல்கள், 17 அசிஸ்ட்டுகள் என 44 கோல்கள் அடிக்க உதவியுள்ளார்.

◎ 44 - முகமது சாலா ( (2024/25)

◎ 43 - லூயிஸ் சௌரஸ் (2013/14)

◎ 42 - முகமது சாலா (2017/18)

ரசிகர்கள் இவரை எகிப்திய அரசன் என புகழ்ந்து வருகிறார்கள். இந்தாண்டு பேலன் தோர் விருதுக்கான போட்டியில் இவர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.