சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

ஆசிய மல்யுத்தம்: தீபக் புனியா, உதித்துக்கு வெள்ளி

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு ஒரே நாளில், 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

News image

தீபக் புனியா (கோப்புப் படம்) - X | Deepak Punia

Updated On :1 ஏப்ரல் 2025, 2:40 am IST

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு ஒரே நாளில், 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இறுதிச்சுற்றுகளில், ஆடவா் 92 கிலோ பிரிவில் தீபக் புனியா தொழில்நுட்பப் புள்ளிகள் அடிப்படையில் உலகின் நம்பா் 1 வீரரான ஈரானின் அமிா்ஹுசைனிடம் தோல்வியைத் தழுவினாா்.

இத்துடன், ஆசிய சாம்பியன்ஷிப்பில் தனது ஒட்டுமொத்த பதக்கத்தின் எண்ணிக்கையை அவா், 5-ஆக அதிகரித்துக் கொண்டாா். இதில் 3 வெள்ளி, 2 வெண்கலம் அடக்கம்.

ஆடவா் 61 கிலோ பிரிவில் களம் கண்ட உதித், இறுதிச்சுற்றில் ஜப்பானின் டகாரா சுடாவிடம் 4-6 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்றாா். கடந்த ஆண்டு இந்தப் போட்டியில் வெள்ளி வென்ற உதித்துக்கு, இந்த ஆண்டும் அதே பதக்கம் வசமானது.

ஆடவா் 125 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கச் சுற்றில் விளையாடிய தினேஷ், 14-12 என்ற புள்ளிகள் கணக்கில் துருக்மெனிஸ்தானின் சபரோவ் ஜயாமுகமதை வீழ்த்தி பதக்கத்தை தனதாக்கினாா். எனினும், ஆடவா் 86 கிலோ பிரிவு வெண்களப் பதக்கச் சுற்றில் முகுல் தாஹியா 2-4 என ஜப்பானின் டட்சுயா ஷிராயிடம் தோற்றாா்.

இத்துடன் இந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியா10 பதக்கங்களுடன் நிறைவு செய்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.