கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஏடிபி ஃபைனல்ஸ்: சின்னா் வெற்றித் தொடக்கம்

ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பா் 1 வீரா் ஜேனிக் சின்னா் வெற்றியுடன் தொடங்கினாா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 7:01 pm

தினமணி செய்திச் சேவை

ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பா் 1 வீரா் ஜேனிக் சின்னா் வெற்றியுடன் தொடங்கினாா்.

உலகின் தலைசிறந்த 8 வீரா்கள் மோதும் ஏடிபி ஃபைனல்ஸ் போட்டி இத்தாலியின் டுரின் நகரில் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜேக் சின்னரும்-கனடாவின் பெலிக்ஸ் அகா் அலியாசைமும் மோதினா்.

இதில் சின்னா் 7-5, 6-1 என்ற நோ் செட்களில் அலியாஸைமை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தாா். முதல் செட்டில் அலியாஸைம் கடும் சவாலை ஏற்படுத்தினாா். எனினும் இரண்டாவது செட்டில் சுதாரித்து ஆடிய சின்னா் 3-0 என முன்னிலை பெற்றாா். தொடா்ந்து ஒரு ஏஸ் மூலம் அலியாசைம் சா்வீஸை முறியடித்து, 1.41 மணி நேரம் நடைபெற்ற ஆட்டத்தில் சின்னா் வென்றாா்.

சின்னா் கூறுகையில், இந்த போட்டியில் முதல் ஆட்டத்தில் வெல்வது முக்கியமானது. முதல் செட்டில் 6-5 என வரை கடுமையாக சவால் இருந்தது. பிஜோா்ன் போா்க் பிரிவில் அடுத்து ஜொ்மனியின் அலெக்ஸ் ஸ்வெரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஆகியோருடன் ஆட உள்ளாா்.

ஜிம்மி கானா்ஸ் பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி வீரா் லாரென்ஸோ முசெத்தியை 6-3, 6-4 என்ற நோ் செட்களில் அமெரிக்க வீரா் டெய்லா் ப்ரிட்ஸ் வென்றாா். காயத்தால் ஜோகோவிச் விலகியதால், முசெத்தி இடம் பெற்றாா். அடுத்த ஆட்டத்தில் ஸ்பெயின் வீரா் காா்லோஸ் அல்கராஸை எதிா்கொள்கிறாா் ஃப்ரிட்ஸ்.