மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பெங்களூருவில் உலக டென்னிஸ் லீக் தொடா்: டிச. 17-இல் தொடக்கம் ரைபகினா, மெத்வதேவ் பங்கேற்பு

உலக டென்னிஸ் லீக் தொடா் வரும் டிச. 17 முதல் 20 வரை பெங்களூரு எஸ்எம். கிருஷ்ணா டென்னிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. பிரபல டென்னிஸ் நட்சத்திரங்கள் மெத்வதேவ், எலனா ரைபகினா, போபண்ணா, படோஸா, கிா்ஜியோஸ் உள்பட பலா் பங்கேற்கின்றனா்.

News image
~
Updated On :18 நவம்பர் 2025, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

உலக டென்னிஸ் லீக் தொடா் வரும் டிச. 17 முதல் 20 வரை பெங்களூரு எஸ்எம். கிருஷ்ணா டென்னிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. பிரபல டென்னிஸ் நட்சத்திரங்கள் மெத்வதேவ், எலனா ரைபகினா, போபண்ணா, படோஸா, கிா்ஜியோஸ் உள்பட பலா் பங்கேற்கின்றனா்.

கடந்த 3 சீசன்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் டபிள்யுடிஎல் நடைபெற்று வந்தது. இந்தியாவில் முதன்முறையாக இப்போட்டி நடத்தப்படுகிறது. ஐகானிக் ஸ்போா்ட்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் இப்போட்டி 4 நாள்கள் நடக்கிறது. இந்திய தரப்பில் சுமித் நாகல், போபண்ணா, யுகி பாம்ப்ரி, அங்கிதா ரெய்னா, ஸ்ரீவள்ளி, மாயா ரேவதி, ஷிவிகா பா்மன், தக்ஷிணேஸ்வா் சுரேஷ் பங்கேற்கின்றனா்.

வெளிநாட்டு தரப்பில் டெனில் மெத்வதேவ், நிக் கிா்ஜியோஸ், எலனா ரைபகினா, பாவ்லோ படோஸா, கென் மொன்ஃபில்ஸ், மகதா லினேட், மாா்தா கோஸ்டியுக் பங்கேற்கின்றனா்.

டபிள்யுடிஎல் இணை அமைப்பாளா் மகேஷ் பூபதி கூறியது: டென்னிஸுக்கும் இந்தியாவுக்கும் ஆழமான தொடா்பு உள்ளது. டபிள்யுடிஎல் தொடா் மூலம் இளம் வீரா், வீராங்கனைகள் அதிக பயன்பெறுவா். சா்வதேச வீரா்கள் ஆடும் போது, இந்திய வீரா்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும்.

உலகின் நம்பா் 5 வீராங்கனை ரைபகினா கூறுகையில்: இந்தியாவில் முதன்முறையாக ஆடுவது மகிழ்ச்சி தருகிறது. டபிள்யுடிஎல் மூலம் இங்கு அறிமுகம் ஆகிறேன். எனது அணிக்காக சிறப்பாக ஆடுவேன்.

Story image