கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

எச்சில் துப்பிய விவகாரம்: இன்டர் மியாமி வீரருக்கு 6 போட்டிகளில் விளையாட தடை!

தடைவிதிக்கப்பட்ட இன்டர் மியாமி வீரர் குறித்து...

News image

மோதலில் ஈடுபட்ட கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள். - படம்: ஏபி

Updated On :6 செப்டம்பர் 2025, 5:05 pm IST

பயிற்சியாளர் மீது எச்சில் துப்பிய விவகாரத்தில் இன்டர் மியாமி வீரர் லூயிஸ் சௌரஸுக்கு 6 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே அவர் மன்னிப்பு கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

லீக்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இன்டர் மியாமி அணி சியாட்டல் சௌண்டர்ஸ் அணியிடம் 0-3 என தோல்வியுற்றது.

போட்டிக்குப் பிறகு இரு அணி வீரர்களுக்கும் மோதலில் ஈடுபட்டார்கள். அதன் நீட்சியாக, லூயிஸ் சௌரஸ் எதிரணியின் பயிற்சியாளர் ஒருவர் மீது எச்சில் துப்பினார்.

இதற்காக அவரைப் பலரும் விமர்சித்தார்கள். பின்னர் இதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்நிலையில், அடுத்த சீசனில் லீக்ஸ் கோப்பையில் 6 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

எம்எல்எஸ் தொடரில் இந்தத் தடை இல்லாவிட்டாலும் அபராதம் எதுவும் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Summary

Inter Miami forward Luis Suárez has been suspended yet again for on-field antics, this time getting a six-match ban from future Leagues Cup matches in response to his conduct including spitting at someone after his team lost Sunday's final to the Seattle Sounders.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.