எச்சில் துப்பிய விவகாரம்: இன்டர் மியாமி வீரருக்கு 6 போட்டிகளில் விளையாட தடை!

தடைவிதிக்கப்பட்ட இன்டர் மியாமி வீரர் குறித்து...
Inter Miami forward Luis Suárez, third from left, is separated from Seattle Sounders players and staffs.
மோதலில் ஈடுபட்ட கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள். படம்: ஏபி
Published on
Updated on
1 min read

பயிற்சியாளர் மீது எச்சில் துப்பிய விவகாரத்தில் இன்டர் மியாமி வீரர் லூயிஸ் சௌரஸுக்கு 6 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே அவர் மன்னிப்பு கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

லீக்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இன்டர் மியாமி அணி சியாட்டல் சௌண்டர்ஸ் அணியிடம் 0-3 என தோல்வியுற்றது.

போட்டிக்குப் பிறகு இரு அணி வீரர்களுக்கும் மோதலில் ஈடுபட்டார்கள். அதன் நீட்சியாக, லூயிஸ் சௌரஸ் எதிரணியின் பயிற்சியாளர் ஒருவர் மீது எச்சில் துப்பினார்.

இதற்காக அவரைப் பலரும் விமர்சித்தார்கள். பின்னர் இதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்நிலையில், அடுத்த சீசனில் லீக்ஸ் கோப்பையில் 6 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

எம்எல்எஸ் தொடரில் இந்தத் தடை இல்லாவிட்டாலும் அபராதம் எதுவும் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Summary

Inter Miami forward Luis Suárez has been suspended yet again for on-field antics, this time getting a six-match ban from future Leagues Cup matches in response to his conduct including spitting at someone after his team lost Sunday's final to the Seattle Sounders.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com