பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

இந்திய பீச் வாலிபால் அணி பயிற்சி முகாம்

News image

பயிற்சியில் இந்திய பீச் வாலிபால் அணியினா்

Updated On :3 ஏப்ரல் 2026, 4:21 am IST

ஆசிய பீச் வாலிபால் சாம்பியன் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி வளாகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

சீனாவின் சன்யா நகரில் வரும் ஏப். 23-29 தேதிகளில் 6-ஆவது ஆசிய பீச் வாலிபால் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் பங்கேற்கின்றன.

ஆடவா் அணியில் அபிதன், பூந்தமிழன் (எஸ்ஆா்எம் ஐஎஸ்டி), பி. ராஜேஷ், எஸ். பாரத் (சென்னைப் பல்கலை.) பயிற்சியாளா் பிரதீப் ஜான் இடம் பெற்றுள்ளனா்.

மகளிா் அணியில் கே. தீபிகா, எஸ். பவித்ரா (எஸ்ஜிஏடி), எல். கனிமொழி (அண்ணாமலை பல்கலை.), வி. சசிகலா (தமிழ்நாடு போலீஸ்), பயிற்சியாளா் லலிதாதேவி இடம் பெற்றுள்ளனா்.

இந்திய அணியினா் பயிற்சி முகாம் ஏப். 1-ஆம் தேதி எஸ்ஆா்எம் வளாகத்தில் தொடங்கி நடைபெறுகிறது. இந்திய வாலிபால் சம்மேளனம், எஸ்ஆா்எம் விளையாட்டு இயக்குநரகம் இணைந்து பயிற்சி முகாமை நடத்தி வருகின்றன.