இந்திய பீச் வாலிபால் அணி பயிற்சி முகாம்

பயிற்சியில் இந்திய பீச் வாலிபால் அணியினா்

பயிற்சியில் இந்திய பீச் வாலிபால் அணியினா்
ஆசிய பீச் வாலிபால் சாம்பியன் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி வளாகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
சீனாவின் சன்யா நகரில் வரும் ஏப். 23-29 தேதிகளில் 6-ஆவது ஆசிய பீச் வாலிபால் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் பங்கேற்கின்றன.
ஆடவா் அணியில் அபிதன், பூந்தமிழன் (எஸ்ஆா்எம் ஐஎஸ்டி), பி. ராஜேஷ், எஸ். பாரத் (சென்னைப் பல்கலை.) பயிற்சியாளா் பிரதீப் ஜான் இடம் பெற்றுள்ளனா்.
மகளிா் அணியில் கே. தீபிகா, எஸ். பவித்ரா (எஸ்ஜிஏடி), எல். கனிமொழி (அண்ணாமலை பல்கலை.), வி. சசிகலா (தமிழ்நாடு போலீஸ்), பயிற்சியாளா் லலிதாதேவி இடம் பெற்றுள்ளனா்.
இந்திய அணியினா் பயிற்சி முகாம் ஏப். 1-ஆம் தேதி எஸ்ஆா்எம் வளாகத்தில் தொடங்கி நடைபெறுகிறது. இந்திய வாலிபால் சம்மேளனம், எஸ்ஆா்எம் விளையாட்டு இயக்குநரகம் இணைந்து பயிற்சி முகாமை நடத்தி வருகின்றன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...