வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

பிரீமியர் லீக்கில் வெடித்த மோதல்..! ஸ்டாப்பேஜ் நேரத்தில் வென்ற செல்ஸி!

பிரீமியர் லீக்கில் ஸ்டாப்பேஜ் நேரத்தில் வென்ற செல்ஸி அணி குறித்து...

News image

மோதலில் ஈடுபட்ட வீரர்கள், கோல் அடித்த மகிழ்ச்சியில் பெர்னான்டஸ். - படங்கள்: ஏபி

Updated On :1 பிப்ரவரி 2026, 12:34 pm IST

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் செல்ஸி அணி ஸ்டாப்பாஜ் நேரத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் இரு அணியினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

செல்ஸி அணி உடன் வெஸ்ட் ஹாம் தனது சொந்த மண்ணில் மோதியது. இந்தப் போட்டியில் முதல் பாதியில் இரண்டு கோல்கள் (7’, 36’) வெஸ்ட் ஹாம் அணி 2-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் 57,70ஆவது நிமிஷத்தில் செல்ஸி அணியினர் கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமன்படுத்தினர்.

ஸ்டாப்பேஜ் நேரத்தில் (90+2’) ஆர்ஜென்டீன வீரர் என்ஜோ பெர்னான்டஸ் அசத்தலாக கோல் அடித்து செல்ஸி அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார்.

இந்தப் போட்டியில் 97-ஆவது நிமிஷத்தில் கார்னருக்குச் சென்ற பந்தினை தன் வசப்படுத்தும் முயற்சியில் இரு அணியினருக்கும் மோதல் வெடித்தது.

இந்த மோதலில் செல்ஸி வீரர் ஜாவோ பெட்ரோவின் கழுத்தை நெறித்த வெஸ்ட் ஹாம் அணியின் வீரர் டொடிபோவுக்கு ரெட் காட்ர்டு வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் செல்ஸி அணி டாப் இடத்துக்கு முன்னேறியுள்ளது. கிளப் உலகக் கோப்பை வென்ற செல்ஸி பிரீமியர் லீக் வெல்லுமா என்ற ஆவலை ரசிகர்கள் ஏற்படுத்தியுள்ளது.

முதலிடத்தில் ஆர்செனல் அணி 53 புள்ளிகளுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Summary

Chelsea Fight Back To Beat West Ham 3-2 As Enzo Fernandez Nets Stoppage-time Winner.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.