ஐரோப்பாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் போடோ/க்ளிம்ட் அணி முதல்முறையாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு (காலிறுதிக்கு முந்தைய சுற்று) தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
கடந்த சீசனில் ரன்னர் அப் அணியான இண்டர் மிலனை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நார்வேயின் வடக்குப் பகுதியில் உள்ள போடோ நகரைச் சேர்ந்த ஒரு தொழில்முறை கால்பந்து கிளப்தான் போடோ/க்ளிம்ட். இந்த அணி இன்டர் மிலனுடன் முதல் கட்ட போட்டியில் 1- 3 என வென்றது.
இரண்டாம் கட்ட போட்டியில் 1- 2 என வென்ற அசத்தியது. மொத்தமாக, 2-5 என்ற கோல்களில் வென்று, ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வாகியுள்ளது.
The Bodø/Glimt fairytale continues at San Siro ð
— UEFA Champions League (@ChampionsLeague) February 24, 2026
Into the round of 16 ð#UCL pic.twitter.com/EhG2oQsXAD
நார்வேயில் கடந்த நவம்பர் முதல் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் இந்த அணி பலம் வாய்ந்த மான்செஸ்டர் சிட்டி, அத்லெட்டிட் மாட்ரிட், இன்டர் மிலன் அணிகளை வீழ்த்தி அசத்தியுள்ளது.
நார்வே நாட்டு அணிகளில் இதற்கு முன்பாக 1999/2000 சீசனில் ரோஸன்பெர்க் அணி மட்டுமே ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய அனைத்து போட்டிகளில் போடோ/க்ளிம்ட் அணியின் ஜென்ஸ் பீட்டர் ஹாஜ் கோல் அடித்து அசத்தியுள்ளார்.
இண்ட்ர மிலனுடன் சிறப்பாக ஆடிய இவர் இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது.
Jens Petter Hauge in 2025/26:
— UEFA Champions League (@ChampionsLeague) February 24, 2026
â½â½ vs Tottenham (H)
â½ vs Dortmund (A)
â½ vs Man City (H)
â½ vs Inter (H)
â½ð°ï¸ vs Inter (A) #UCL | #POTM pic.twitter.com/ih6VEAC5gx
Summary
History Written in yellow. FK Bodø/Glimt have qualified for the Round of 16 of the UEFA Champions League for the FIRST time ever.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










