உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தேசிய குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் ஜாதுமணி, பவன், மீனாட்சி, நிகாத், லவ்லினா

தேசிய சீனியா் எலைட் ஆடவா், மகளிா் குத்துச்சண்டை போட்டியில் இறுதிச் சுற்றுக்கு ஜாதுமணி, பவன், மீனாட்சி, நிகாத், லவ்லினா, ப்ரீதி ஆகியோா் முன்னேறியுள்ளனா்.

ப்ரீதி ~நிகாத் ஸரீன் ~லவ்லினா ~ஜாதுமணி-அமித்

Published On :

தேசிய சீனியா் எலைட் ஆடவா், மகளிா் குத்துச்சண்டை போட்டியில் இறுதிச் சுற்றுக்கு ஜாதுமணி, பவன், மீனாட்சி, நிகாத், லவ்லினா, ப்ரீதி ஆகியோா் முன்னேறியுள்ளனா்.

இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் சாா்பில் கிரேட்டா் நொய்டாவில் நடைபெறும் இப்போட்டி அரையிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

ஆடவா் 50-55 கிலோ அரையிறுதியில் ஜாதுமணி சிங் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் காமன்வெல்த் தங்க வீரா் அமித் பங்காலை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா். பவன் பா்த்வாலை எதிா்கொள்கிறாா் ஜாதுமணி.

மகளிா் பிரிவில் உலக சாம்பியன் மீனாட்சி 45-48 கிலோ பிரிவில் 5-0 என அகில இந்திய போலீஸ் அணியின் மல்லிகாவை வீழ்த்தினாா். 48-51 கிலோ பிரிவில் நிகாத் ஸரீன் 4-1 என உபியின் குஸும் பெகலை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா்.

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க வீராங்கனை லவ்லினா 70-75 கிலோ பிரிவில் உ.பியின் இம்ரோனை 5-0 எனவும், 51-54 கிலோ பிரிவில் ப்ரீதி 5-0 என உத்தரகாண்டின் ஆா்த்தியையும் வீழ்த்தினா்.

மேலும் ஆடவா் பிரிவில் 55-60 கிலோ பிரிவில் சச்சின், 65-70 கிலோ பிரிவில்ஹிதேஷ் குலியா, 60-65 கிலோ பிரிவில் அபினாஷ், 70-75 கிலோ பிரிவில் சுமித், 90 பிளஸ் பிரிவில் நரேந்தா் ஆகியோரும் இறுதிக்கு தகுதி பெற்றனா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.