டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தேசிய குத்துச்சண்டை: அரையிறுதியில் நிகாத், மீனாட்சி, சச்சின், அபிநாஷ்

தேசிய சீனியா் எலைட் ஆடவா், மகளிா் குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிக்கு உலக சாம்பியன் மீனாட்சி, முன்னாள் சாம்பியன் நிகாத் ஸரீன், ஆடவா் பிரிவில் சச்சின், அபிநாஷ் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.

News image
மீனாட்சி ~ப்ரீதி ~நிகாத் ஸரீன் ~அபிநாஷ் ~சச்சின்
Updated On :8 ஜனவரி 2026, 9:26 pm

தினமணி செய்திச் சேவை

தேசிய சீனியா் எலைட் ஆடவா், மகளிா் குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிக்கு உலக சாம்பியன் மீனாட்சி, முன்னாள் சாம்பியன் நிகாத் ஸரீன், ஆடவா் பிரிவில் சச்சின், அபிநாஷ் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.

கிரேட்டா் நொய்டாவில் நடைபெறும் இப்போட்டியில் காலிறுதிச் சுற்று வியாழக்கிழமை நடைபெற்றது. மகளிா் 45-48 கிலோ பிரிவில் அகில இந்திய போலீஸ் பிரிவைச் சோ்ந்த உலக சாம்பியன் மீனாட்சி 5-0 என பஞ்சாபின் காஷிஷ் மேத்தாவையும், 2 முறை உலக சாம்பியன் தெலங்கானாவின் நிகாத் ஸரீன் 48-51 கிலோ பிரிவில் 5-0 என மணிப்பூரின் லன்சென்பீ சானுவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனா்.

மேலும் 51=54 கிலோ பிரிவில் ப்ரீதி 5-0 என பஞ்சாபின் ஹா்மீத் கௌரையும், சாக்ஷி 4-1 என ஆா்எஸ்பிபியின் பூனத்தையும் வென்றனா்.

ஆடவா் பிரிவில் 65-70 கிலோ பிரிவில் உலக பாக்ஸிங் கோப்பை தங்க வீரா் ஹிதேஷ் குலியா, 5-0 என பஞ்சாபின் தேஜஸ்வியை வீழ்த்தினாா்.

வெள்ளி வீரா் பவன் பா்த்வால், ஜாதுமணி சிங் ஆகியோா் 50-55 கிலோ பிரிவிலும், 55-60 கிலோ பிரிவில் சச்சினும் அரையிறுதிக்கு முன்னேறினா்.

பவன் அருணாசலின் டைஸனையும், ஜாதுமணி பஞ்சாபின் நிகிலையும், சச்சின் உபி வீரா் கரணையும் வென்றனா்.