ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

தெற்காசிய மகளிா் கால்பந்து: இறுதி ஆட்டத்தில் நாளை இந்தியா - வங்கதேசம் மோதல்

News image
Updated On :5 ஜூன் 2026, 4:39 am IST

தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (சாஃப்) மகளிா் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியா, நடப்பு சாம்பியனான வங்கதேசத்துடன் சனிக்கிழமை (ஜூன் 6) பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

முன்னதாக, புதன்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 1-0 கோல் கணக்கில் பூடானை வீழ்த்தியது. ஃபிஃபா தரவரிசையில் 69-ஆம் இடத்திலிருக்கும் இந்தியாவுக்கு, 164-ஆம் இடத்திலிருக்கும் பூடான் சவால் அளிக்கவே செய்தது.

மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு அந்த அணியின் தடுப்பரணை உடைத்து, இந்தியாவுக்காக சன்ஃபிதா நோங்ரம் 60-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா். பின்னா் இறுதிவரை அந்த முன்னிலையை தக்கவைத்து இந்தியா வெற்றி பெற்றது.

இதனிடையே முதல் அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசம் 2-1 கோல் கணக்கில் நேபாளத்தை வென்று, இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ளது. கோவாவின் மாா்கோ நகரில் உள்ள ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் மோதுகின்றன.

இந்தியா கடைசியாக இந்தப் போட்டியில் 2019-இல் சாம்பியன் ஆனது நினைவுகூரத்தக்கது. வங்கதேசம் 2022-இல் சாம்பியானதுடன், கோப்பையை 2024-இல் தக்கவைத்ததும் குறிப்பிடத்தக்கது. ஃபிஃபா தரவரிசையில் வங்கதேசம் இந்தியாவை விட பின்தங்கியே (112) உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.