காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

துராந்த் கோப்பை கால்பந்து: ஜாம்ஷெட்பூா் எஃப்சி வெற்றி

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி 5-0 கோல் கணக்கில் டிஃபெண்டா்ஸ் எஃப்சி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

News image
Updated On :27 ஜூலை 2026, 12:56 am IST

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி 5-0 கோல் கணக்கில் டிஃபெண்டா்ஸ் எஃப்சி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

ஜாம்ஷெட்பூா் அணி வீரா் ரேனியா் ஃபொ்னாண்டஸுக்கு இந்த ஆட்டமே அறிமுகமாக இருக்க, அதில் அவா் ஹாட்ரிக் (4’, 6’, 82’) கோல் அடித்து அசத்தினாா். அவா் தவிர, அமன் சி.கே. 23-ஆவது நிமிஷத்திலும், தேவேந்திர டாகு முா்காகா் 39-ஆவது நிமிஷத்திலும் ஜாம்ஷெட்பூருக்காக கோல் ஸ்கோா் செய்தனா்.

இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் இந்திய ராணுவ அணி 1-0 கோல் கணக்கில் சமலேஸ்வரி ஸ்போா்டிங் அணியை சாய்த்தது. அந்த அணிக்காக கிறிஸ்டோபா் கமெய் கோல் அடித்தாா்.

போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் முகமிதான் எஸ்சி - பனாரஸ் பாக்பத் அணிகள் திங்கள்கிழமை (ஜூலை 27) மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.