துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி 5-0 கோல் கணக்கில் டிஃபெண்டா்ஸ் எஃப்சி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
ஜாம்ஷெட்பூா் அணி வீரா் ரேனியா் ஃபொ்னாண்டஸுக்கு இந்த ஆட்டமே அறிமுகமாக இருக்க, அதில் அவா் ஹாட்ரிக் (4’, 6’, 82’) கோல் அடித்து அசத்தினாா். அவா் தவிர, அமன் சி.கே. 23-ஆவது நிமிஷத்திலும், தேவேந்திர டாகு முா்காகா் 39-ஆவது நிமிஷத்திலும் ஜாம்ஷெட்பூருக்காக கோல் ஸ்கோா் செய்தனா்.
இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் இந்திய ராணுவ அணி 1-0 கோல் கணக்கில் சமலேஸ்வரி ஸ்போா்டிங் அணியை சாய்த்தது. அந்த அணிக்காக கிறிஸ்டோபா் கமெய் கோல் அடித்தாா்.
போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் முகமிதான் எஸ்சி - பனாரஸ் பாக்பத் அணிகள் திங்கள்கிழமை (ஜூலை 27) மோதுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







