காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

இரண்டாம் பாதியில் கம்பேக் அளித்த தென் கொரியா த்ரில் வெற்றி!

கால்பந்து உலகக் கோப்பையின் இரண்டாவது போட்டி குறித்து...

South Korea's Park Jin-seob reacts after defeating Czechia during the World Cup Group A soccer match in Zapopan, near Guadalajara, Mexico, Thursday, June 11, 2026. (AP Photo/Dolores Ochoa)

வெற்றிக் களிப்பில் தென் கொரிய வீரர்கள். - படம்: ஏபி

Published On :

கால்பந்து உலகக் கோப்பையின் இரண்டாவது போட்டியில் தென் கொரியா 2-1 என செக் குடியரசு அணியை வீழ்த்தியது.

நடப்பு உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகின்றன. இதில் முதல் போட்டி மெக்சிகோவில் நடைபெற்றது. சொந்த மண்ணில் மெக்சிகோ வரலாற்று வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியும் மெக்சிகோவிலேயே தொடங்கியது. இதில் தென் கொரியாவும் செக் குடியரசு அணியும் மோதின. இந்தப் போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் தடுமாறின.

இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் 59ஆவது நிமிஷத்தில் செக் குடியரசு அணியின் வீரர் லாடிஸ்லாவ் கிரெஜ்சி கோல் அடித்து 1-0 என முன்னிலை வகித்தார்.

அடுத்து கம்பேக் அளித்த தென் கொரிய அணியின் வீரர் ஹ்வாங் இன்-போம் 67-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 1-1 என சமன்படுத்தினார். ஆட்டம் விருவிருப்படைந்தது.

பின்னர், 80ஆவது நிமிஷத்தில் தென் கொரியாவின் ஓ ஹியோன்-கியூ கோல் அடித்து 2-1 என முன்னிலை வகிக்க உதவினார். பின்னர், இறுதியில் அதே கோல்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஒரு கோல், ஒரு அசிஸ்ட் செய்து அசத்திய ஹ்வாங் இன்-போம் ஆட்ட நாயகன் விருது வென்றார். பெரிதும் எதிர்பார்த்த சன் பெரிதாக சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Hwang In-beom sparks South Korea''s 2-1 comeback win over the Czech Republic at the World Cup

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.