கால்பந்து உலகக் கோப்பையின் 1000-ஆவது போட்டியில் ஜப்பான் அணி துனிசியாவை வீழ்த்தி, உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றியது.
ஆடவர் அணிகளுக்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் 1930 முதல் நடைபெற்று வருகின்றன. இதன் ஆயிரமாவது போட்டி இன்று இந்திய நேரப்படி 9.30 மணிக்கு நடைபெற்றது.
மெக்சிகோவின் மான்டேரி அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் குரூப் எஃப் பிரிவில் இருக்கும் துனிசியா - ஜப்பான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஜப்பான் அணியினர் 4 கோல்கள் அடித்தார்கள்.
அதில் 4ஆவது நிமிஷத்தில் டைச்சி கமடா, 31ஆவது நிமிஷத்தில் அயாசே உவேடா , 69ஆவது நிமிஷத்தில் ஜுன்யா இடோ, 83ஆவது நிமிஷத்தில் அயாசே உவேடா மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார்கள். இறுதியில் ஜப்பான் 4-0 என வென்றது.
இந்தப் போட்டியில் தோல்வியுற்றதால் துனிசியா வெளியேறியது. ஜப்பான் அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடம் வகிக்கிறது. நெதர்லாந்து அணி மொத்தமாக 7 கோல்கள் அடித்துள்ளதால் முதலிடத்தில் இருக்கிறது.
ஜப்பான் டாப் 2 இடத்திற்கு முன்னேற வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றாலும், அதிக கோல்கள் அடித்துள்ளதால் மூன்றாவது இடம் பிடித்தாலும் நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாக வாய்ப்பிருக்கிறது.
ஜப்பான அணி 2019 முதல் ஐரோப்பிய அணிகளிடம் தோல்வியுற்றதே இல்லை என்ற தனது சாதனையை தக்க வைத்துள்ளது. வரும் வியாழக்கிழமை ஸ்வீடன் உடன் தனது கடைசி போட்டியில் மோதவிருக்கிறது.
Summary
Ayase Ueda scores twice in Japan's 4-0 win against Tunisia in 1,000th men's World Cup match
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










