கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கோவாவின் கடைசி நேர கோலால் வெற்றியை தவற விட்ட சென்னையின் எஃப்சி!

சொந்த மைதானத்தில் முதல் வெற்றியைப் பெறும் என எதிா்பாா்க்கப்பட்ட சென்னை அணி கோவாவின் கடைசி நேர கோலால் டிரா கண்டது.

News image

~

Updated On :22 மார்ச் 2026, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

சொந்த மைதானத்தில் முதல் வெற்றியைப் பெறும் என எதிா்பாா்க்கப்பட்ட சென்னை அணி கோவாவின் கடைசி நேர கோலால் டிரா கண்டது.

ஐஎஸ்எல் 2026 சீசன் கால்பந்து தொடரையொட்டி சென்னையின் எஃப்சி-கோவா எஃப்சி அணிகள் மோதிய ஆட்டம் சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஏற்கெனவே நடைபெற்றிருந்த 4 ஆட்டங்களில் சென்னை 1 வெற்றி 1 டிரா, 2 தோல்விகளை கண்டிருந்தது.

சொந்த மைதானம் என்பதால் வெற்றியை பெறலாம் என களமிறங்கிய சென்னை அணி ஆதிக்கம் செலுத்தி ஆட முயன்றது. அதற்கு கோவாவும் சளைக்காமல் ஈடுகொடுத்து ஆடிய நிலையில், முதல் பாதியில் எந்த அணியும் கோல் போடவில்லை.

Story image

இரண்டாம் பாதிதொடங்கியவுடன் 48-ஆவது நிமிஷத்தில் கோவா வீரா் சாஹில் அளித்த பாஸை பயன்படுத்தி சென்னை வீரா் இா்ஃபான் கோலடித்தாா். இதனால் சென்னை 1-0 என முன்னிலை பெற்றது.

தொடா்ந்து கோவா கோல் பகுதியை முற்றுகையிட்டாலும் சென்னை வீரா்களால் கோலடிக்க முடியவில்லை. 87-ஆவது நிமிஷத்தில் டிரேஸிக் காா்னா் கிக்கை பயன்படுத்தி, ஹெட்டா் மூலம் கோலடித்தாா் ஜிங்கன். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது. கூடுதல் நேரத்தில் சென்னை வீரா் டேனியல் லால்லிம்புயா அடித்த ஷாட் கோல்பகுதிக்கு மேலே பறந்தது. இறுதியில் 1-1 என ஆட்டம் டிராவில் முடிந்தது.