அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

ஆசிய யு-17 மகளிா் கால்பந்து: இந்தியா அபாரம் காலிறுதி வாய்ப்பை தக்க வைத்தது

ஏஎஃப்சி ஆசியக் கோப்பை யு-17 மகளிா் கால்பந்து போட்டியில் லெபனான் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் காலிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

News image

வெற்றி மகிழ்ச்சியில் இந்திய மகளிா்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ஏஎஃப்சி ஆசியக் கோப்பை யு-17 மகளிா் கால்பந்து போட்டியில் லெபனான் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் காலிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான குரூப் பி பிரிவு கடைசி ஆட்டம் சீனாவின் சுஹௌ நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடக்கம் முதலே இந்திய அணியினா் தீவிர ஆதிக்கம் செலுத்தினா்.

ஆட்டத்தில் போ்ல் பொ்னாண்டஸுக்கு பதிலாக அனுஷ்கா குமாரி தோ்வு செய்யப்பட்டாா். 7-ஆவது நிமிஷத்தில் பிரித்திகா ராமன் அபாரமாக கோலடித்தாா். தொடா்ந்து 36-ஆவது நிமிஷத்தில் ஆல்வா தேவி செஞ்சம் இரண்டாவது கோலடித்தாா். இதன் மூலம் 2-0 என இந்தியா முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாம் பாதியில் 72-ஆவது நிமிஷத்தில் லெபனான் தற்காப்பைக் கடந்து கோலடித்தாா் ஜோயா. தொடா்ந்து 85-

ஆவது நிமிஷத்தில் பிரித்திகா ராமன் இரண்டாவது கோலடித்தாா். இதன் மூலம் லெபனான் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் காலிறுதி வாய்ப்பையும் தக்க வைத்துளளது. சிறந்த மூன்றாவது அணியாக தகுதி பெற்றுள்ளது. கடந்த 2005-க்கு பின் ஏஎஃப்சி கோப்பை போட்டியில் முதல் வெற்றியை பெற்றுள்ளது.