பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இத்தாலி கோப்பையை வென்ற இன்டர் மிலன்..! 16 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டைச் சாம்பியன்!

இத்தாலி கோப்பையை 10ஆவது முறையாக வென்ற இன்டர் மிலன் அணி குறித்து...

Double Champions: Inter Milan, winners of the Italian Cup.

இரட்டைச் சாம்பியன், இத்தாலி கோப்பையை வென்ற இன்டர் மிலன் அணியினர். - படங்கள்: எக்ஸ் / இன்டர் மிலன்.

Published On :

இத்தாலியில் நடைபெறும் இத்தாலி கோப்பை இறுதிப் போட்டியில் 2-0 என வென்று இன்டர் மிலன் கோப்பையை கைப்பற்றியது. இது இந்த அணிக்கு 10ஆவது இத்தாலி கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியன் கால்பந்து லீக் சீரி ஏவில் (இத்தாலி சாம்பியன்ஷிப்) முதலிடம் பிடித்த இன்டர் மிலன் அணிக்கு இந்த சீசனில் இரட்டைச் சாம்பியன் என்பது ரசிகர்களிடம் கூடுதல் சிறப்பைப் பெற்றுள்ளது.

இறுதிப் போட்டியில் லாசியோ - இன்டர் மிலன் மோதின. இதில் 2-0 என இன்டர் மிலன் வென்றது. இந்தப் போட்டியில் 14ஆவது நிமிஷத்தில் ஒரு ஓன் கோல், 35ஆவது நிமிஷத்தில் லொடாரோ மார்டினெஷ் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

இத்தாலியில் மிகவும் புகழ்பெற்ற கால்பந்துப் போட்டிகளான சீரிஸ் ஏ, இத்தாலி கோப்பை ஆகிய இரண்டையும் இன்டர் மிலன் அணி தன்வசப்படுத்தியுள்ளது.

இந்த இரட்டைச் சாம்பியன் என்ற அந்தஸ்தை சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்டர் மிலன் அணி அடைந்துள்ளது. ஜோஸ் மொரிங்கோ தலைமையில் இன்டர் மிலன் 2010 சீசனில் சாம்பியன்ஸ் லீக், சீரிஸ் ஏ (இத்தாலி சாம்பியன்ஷிப்), இத்தாலி கோப்பையை வென்றிருந்தது.

Summary

Inter Milan seals a long-awaited double with a 2-0 Italian Cup win over Lazio

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.