நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

அதிக கோல்கள்: டாப் 10 பிரேசில் வீரர்கள் பட்டியலில் இணைந்த ரபீனியா!

சாம்பியன்ஸ் லீக்கில் அதிக கோல்கள் அடித்த பிரேசில் வீரர்கள் பட்டியலில் இணைந்த ரபீனியா குறித்து...

Raphinha overjoyed after scoring a goal.

கோல் அடித்த மகிழ்ச்சியில் ரபீனியா - படம்: எக்ஸ் / எஃப்சி பார்சிலோனா

Published On :

சாம்பியன்ஸ் லீக்கில் அதிக கோல்கள் அடித்த டாப் 10 பிரேசில் வீரர்கள் பட்டியலில் பார்சிலோனாவின் கேப்டன் ரபீனியா இணைந்துள்ளார்.

பிரேசிலைச் சேர்ந்த ரபீனியா (29 வயது) பார்சிலோனா அணியில் விளையாடி வருகிறார். இந்த சீசனில் மட்டும் 5 போட்டிகளில் 8 கோல்கள், 1 அசிஸ்ட் செய்து அசத்தியுள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நேற்று (செப்.9) முதல் நடைபெற தொடங்கியுள்ளன. ஐரோப்பிய கண்டத்திலேயே கிளப்புகளுக்கான மிகப் பெரிய கால்பந்துத் தொடராக இருக்கின்றது.

பார்சிலோனா அணி தனது முதல் சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் 5-1 என அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ரபீனியா 2 கோல்கள் அடித்தார். இதன் மூலம் சாம்பியன்ஸ் லீக்கில் அதிக கோல்கள் அடித்த டாப் 10 பிரேசில் வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக்கில் 20 கோல்கள் அடித்த ரொமாரியோவை பின்னுக்குத் தள்ளி 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் டாப் 10 பிரேசில் வீரர்கள்

1. நெய்மர் ஜூனியர் - 43 கோல்கள்

2. வினிசியஸ் ஜூனியர் - 34 கோல்கள்

3. காகா - 30 கோல்கள்

4. கேப்ரியல் ஜீசஸ் - 27 கோல்கள்

5. ரிவால்டோ - 27 கோல்கள்

6. ரோட்ரிகோ - 26 கோல்கள்

7. ஜர்டேல் - 25 கோல்கள்

8. ஜியோவனி எல்பெர் - 24 கோல்கள்

9. ரோபர்டோ ஃபெர்மினோ - 22 கோல்கள்

10. ரபீனியா - 21 கோல்கள்

Summary

Most Goals In the Champions League: Raphinha joins the list of top 10 Brazilian players!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.