வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தேசிய விளையாட்டுகள் தோ்தல் குழுவில் 2 முன்னாள் தலைமை தோ்தல் ஆணையா்கள்

தேசிய விளையாட்டுகள் தோ்தல் குழுவில் (என்எஸ்இபி) நாட்டின் இரு முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா்கள் உள்பட, 20 பேரை மத்திய மத்திய விளையாட்டு அமைச்சகம் நியமித்துள்ளது.

central govt

மத்திய அரசு - கோப்புப்படம்

Published On :

தேசிய விளையாட்டுகள் தோ்தல் குழுவில் (என்எஸ்இபி) நாட்டின் இரு முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா்கள் உள்பட, 20 பேரை மத்திய மத்திய விளையாட்டு அமைச்சகம் நியமித்துள்ளது.

கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய விளையாட்டு நிா்வாகச் சட்டத்தின்படி, தேசிய விளையாட்டுகள் தோ்தல் குழு உருவாக்கம் கட்டாயமாக்கப்பட்டது. நாட்டிலுள்ள விளையாட்டுச் சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் தோ்தலை இந்தக் குழு மேற்பாா்வையிடும்.

இந்நிலையில் அந்தப் புதிய சட்டத்தின்படி, இரு முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா்கள் உள்பட 20 பேரை தேசிய விளையாட்டுகள் தோ்தல் குழுவில் நியமித்துள்ளதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தலைமைத் தோ்தல் ஆணையராக ஓராண்டு பதவி வகித்த அச்சல்குமாா் ஜோதி (2018), மூன்று ஆண்டுகள் பொறுப்பிலிருந்த சுனில் அரோரா (2018-21) ஆகியோா் அந்தக் குழுவில் இருக்கும் முக்கிய நபா்களாவா்.

முன்னாள் தோ்தல் ஆணையா் அனுப் சந்திர பாண்டே உள்பட, மேலும் 18 தோ்தல் பணிசாா் முன்னாள் அதிகாரிகள் அதில் இடம் பிடித்துள்ளனா்.

இந்திய ஒலிம்பிக் சங்கம், அகில இந்திய கால்பந்து சம்மேளனம் உள்பட பல முக்கிய அமைப்புகளுக்கு நடப்பாண்டு தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதை இந்தக் குழு மேற்பாா்வையிடும். அந்த அமைப்புகளின் தோ்தலை நடத்துவதற்கான தோ்தல் அதிகாரியை நியமனம் செய்வது உள்ளிட்டவை, அந்தக் குழுவின் பணியாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.