கோலியின் ஆட்டம் குறித்து அனுஷ்கா என்ன சொல்கிறார்?
டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான விராட் கோலியின் ஆட்டம் குறித்து, அவரது மனைவி அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.


டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான விராட் கோலியின் ஆட்டம் குறித்து, அவரது மனைவி அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அசாத்தியமான ஒரு ஆட்டத்தை ஆடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்த விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார்.
கோலியின் இந்த ஆட்டத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த வரிசையில் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்பு கலந்த பாராட்டைத் தெரிவித்துள்ளார்.
அனுஷ்கா பதிவு:
"இன்றைய இரவில் ஏராளமான மக்களின் வாழ்வில் நீ மகிழ்ச்சியைத் தந்துள்ளாய். அதுவும் தீபாவளிக்கு முந்தைய நாளில்!
என் வாழ்வில் நான் பார்த்த தலைசிறந்த ஆட்டம் என்றுதான் நான் சொல்ல வேண்டும். நம் அம்மா ஏன் இப்படி கத்தி, குதித்து ஆர்ப்பரிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத சிறுகுழந்தைதான் நம் மகள். ஆனால், நம் தந்தை மிகக் கடினமான காலத்துக்குப் பிறகு, வலிமையுடன், முன்பு எப்போதும் இல்லாததைவிட சிறந்தவராக மீண்டு வந்து, அன்றைய இரவு ஒரு தலைசிறந்த இன்னிங்ஸை விளையாடினார் என்பதை அவள் ஒருநாள் புரிந்துகொள்வாள்.
உன்னை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது."
இதற்குப் பதிலளித்துள்ள விராட் கோலி, "என்னுடைய ஒவ்வொரு தருணத்திலும் உடன் இருந்தமைக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...