அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

எதிரணி யாரென யோசிக்கவில்லை; வெற்றிக்குப் பிறகு ரஷித் கான் பேச்சு!

எதிரணியின் வலிமையைப் பற்றி யோசிக்காது தங்களது திறமையில் கவனம் செலுத்துவதாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

News image
- படம் | AP
Updated On :8 ஜூன் 2024, 11:47 am

DIN

எதிரணியின் வலிமையைப் பற்றி யோசிக்காது தங்களது திறமையில் கவனம் செலுத்துவதாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இதுவரை விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி குரூப் சி பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்த நிலையில், எதிரணியின் வலிமையைப் பற்றி யோசிக்காது தங்களது திறமையில் கவனம் செலுத்துவதாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: எதிரணியின் வலிமையைப் பற்றி யோசிப்பதைக் காட்டிலும், எங்களது அணியின் திறமைகளில் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும். இந்த ஒரு விஷயத்தையே அணியில் உள்ள அனைவருக்கும் நான் கூறி வருகிறேன். எந்த அணிக்கு எதிராக விளையாடுகிறோம் என்பது முக்கியமில்லை. எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறோம் என்பதே முக்கியம்.

நேர்மையாக கூறவேண்டுமென்றால், போட்டியின் முடிவு குறித்து நான் அதிகம் கவலைப்படுவதில்லை. நாங்கள் எந்த அளவுக்கு வெற்றிக்காக உழைப்பைக் கொடுத்துள்ளோம் என்பதிலேயே கவனம் செலுத்துகிறோம். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பையில் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், டி20 உலகக் கோப்பையில் இதுபோன்ற வெற்றியைப் பெற்றதில்லை. எங்களது சிறப்பான வெற்றிகளில் இதுவும் ஒன்று என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.