ஒருமுறை வில்லிசை விற்பன்னர் சுப்பு ஆறுமுகம் வீட்டிற்கு கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சென்றிருந்தபோது, சுப்பு ஆறுமுகத்தின் அம்மா பூஜையிலிருந்து கற்பூர ஆரத்தி தட்டுடன் வெளியே வந்தார். தட்டை நீட்டியதும் கலைவாணர் கை நிறைய விபூதியை அள்ளி நெற்றி நிறைய பூசிக்கொண்டார். இதைப் பார்த்த சுப்பு ஆறுமுகம் தனியாக பேசிக் கொண்டிருந்தபோது ""நீங்கள் திருநீறு பூசமாட்டீர்கள்! இன்றைக்கு
எப்படி?'' என்றார்.
""கண்ணால் காணாத தெய்வத்தை மறுப்பதால் கண் கண்ட தெய்வமான தாயார் மனதைப் புண்படுத்தலாமா? அதான் பூசிக்கொண்டேன்'' என்றார் கலைவாணர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









