அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

தமிழ்ப் பண்பு மாறாத ம.பொ.சி.

சென்னை பல்கலைக்கழகத்திற்கு செனட் உறுப்பினராக ம.பொ.சி. தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

News image
Updated On :21 மார்ச் 2013, 5:05 pm IST

சென்னை பல்கலைக்கழகத்திற்கு செனட் உறுப்பினராக ம.பொ.சி. தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஒரு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. உறுப்பினர் என்ற முறையில் ம.பொ.சி. அந்த விழாவுக்குச் செல்ல வேண்டும். அந்த விழாவுக்குச் செல்லும்போது பட்டதாரிகள் அணியும் கருப்பு அங்கி அணிந்து கொள்ள வேண்டும்.

நண்பரான செங்கல்வராயனிடம் தம்முடைய தர்மசங்கடத்தைக் கூறினார். ம.பொ.சியை கவலைப்பட வேண்டாம் என்று அபயமளித்தார் செங்கல்வராயன்.

உடனே எட்டுமுழம் வேஷ்டியைக் கொண்டு ம.பொ.சி. பஞ்சகச்சம் கட்டிவிட்டார். கருப்பு கவுனையும் மாட்டினார். தோற்றம் மாறியது. தம்முடைய அந்த தோற்றத்தைக் கண்ணாடியில் பார்த்தார் ம.பொ.சி.

தமிழ் பண்புக்கோ பழக்க,வழக்கத்துக்கோ சற்றும் ஒத்துவராத இந்த கறும்பூத உடையை நான் அணிய விரும்பவில்லை. செனட்டர் பதவியை பல்கலைக்கழகத்தினர் பறித்துக் கொண்டால் கூட நான் கவலைப்படப்போவதில்லை...'' என்று கூறிய ம.பொ.சி அதற்குப் பிறகு செனட் கூட்டம் எதிலும் கலந்துகொள்ளவேஇல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.