சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தமிழ்ப் பண்பு மாறாத ம.பொ.சி.

சென்னை பல்கலைக்கழகத்திற்கு செனட் உறுப்பினராக ம.பொ.சி. தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

News image
Updated On :21 மார்ச் 2013, 11:35 am

சென்னை பல்கலைக்கழகத்திற்கு செனட் உறுப்பினராக ம.பொ.சி. தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஒரு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. உறுப்பினர் என்ற முறையில் ம.பொ.சி. அந்த விழாவுக்குச் செல்ல வேண்டும். அந்த விழாவுக்குச் செல்லும்போது பட்டதாரிகள் அணியும் கருப்பு அங்கி அணிந்து கொள்ள வேண்டும்.

நண்பரான செங்கல்வராயனிடம் தம்முடைய தர்மசங்கடத்தைக் கூறினார். ம.பொ.சியை கவலைப்பட வேண்டாம் என்று அபயமளித்தார் செங்கல்வராயன்.

உடனே எட்டுமுழம் வேஷ்டியைக் கொண்டு ம.பொ.சி. பஞ்சகச்சம் கட்டிவிட்டார். கருப்பு கவுனையும் மாட்டினார். தோற்றம் மாறியது. தம்முடைய அந்த தோற்றத்தைக் கண்ணாடியில் பார்த்தார் ம.பொ.சி.

தமிழ் பண்புக்கோ பழக்க,வழக்கத்துக்கோ சற்றும் ஒத்துவராத இந்த கறும்பூத உடையை நான் அணிய விரும்பவில்லை. செனட்டர் பதவியை பல்கலைக்கழகத்தினர் பறித்துக் கொண்டால் கூட நான் கவலைப்படப்போவதில்லை...'' என்று கூறிய ம.பொ.சி அதற்குப் பிறகு செனட் கூட்டம் எதிலும் கலந்துகொள்ளவேஇல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.