தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

பழமொழி நானூறு - முன்றுறையரையனார்

படுத்து உறங்குவதற்கு ஓர் இடம் இல்லாத வறியராக இருந்தபோதும் நன்றாக உடுத்து வருபவர்களைப் பார்த்துப் "பசிக்கு உணவு உண்கிறீர்களோ?' என்று கேட்பவர் யாருமில்லை.

News image
Updated On :17 ஜனவரி 2021, 6:58 am


உடை மதிப்பு தரும்

அகத்தால் அழிவு பெரிதாயக் கண்ணும்
புறத்தால் பொலிவுறல் வேண்டும் - எனைத்தும்
படுக்கை இலராயக் கண்ணும் உடுத்தாரை
உண்டி வினவுவார் இல்   (பாடல்-185)

படுத்து உறங்குவதற்கு ஓர் இடம் இல்லாத வறியராக இருந்தபோதும் நன்றாக உடுத்து வருபவர்களைப் பார்த்துப் "பசிக்கு உணவு உண்கிறீர்களோ?' என்று கேட்பவர் யாருமில்லை. அதனால், வீட்டினிடத்தே அழிவு மிகுதியாயிருந்த காலத்தும் ஒருவர் எப்படியாயினும் தம் புறத்தோற்றத்தினால் பொலிவுற்று விளங்குதல் நன்று. உயர்குடிப் பிறந்தவர் எத்துணை வறுமை வந்தபோதும் பிறர் அதனைக் கண்டு தம்மீது கருணை கொள்ளுமாறு தம்மைத் தாழ்த்திக் கொள்ளமாட்டார் என்பது கருத்து. "உடுத்தாரை உண்டி வினவுவார் இல்' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.