குரூப் 4 தேர்வுக்குப் பிறகு தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட பல தேர்வுகளுக்கும் முடிவுகள் வெளியிடப்பட்டு, தேர்வானோர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் அதற்கு முன்பு நடைபெற்ற தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்குத் தேர்வானோர், சான்றிதழ் சரிபார்ப்புக்குக்கூட அழைக்கப்படவில்லை.அறிவிக்கப்பட்ட காலியிடங்களைவிடக் குறைவானோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் சூழ்நிலையில், அதில் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ளோரை நியமிப்பது வழக்கம். அதன் அடிப்படையிலும் தாங்கள் நியமிக்கப்படவில்லை என தேர்வானோர் தெரிவித்தனர்.