சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வற்றிப்போன குசஸ்தலை ஆறு: விவசாயிகள் கவலை

திருத்தணி, மே 2: திருத்தணி பகுதியில் இந்த ஆண்டும் மழை இல்லாத நிலையில், குசஸ்தலை ஆறு 6 ஆண்டுகளாக வறண்டு காணப்படுகிறது. இது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. திருத்தணியை ஒட்டி விவசாயத்தை சார்ந்த சொரக்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:52 pm

ஜி. யோகானந்தம்

திருத்தணி, மே 2: திருத்தணி பகுதியில் இந்த ஆண்டும் மழை இல்லாத நிலையில், குசஸ்தலை ஆறு 6 ஆண்டுகளாக வறண்டு காணப்படுகிறது. இது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

திருத்தணியை ஒட்டி விவசாயத்தை சார்ந்த சொரக்காய்பேட்டை, பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு, நல்லாட்டூர், பூனிமாங்காடு, நெமிலி, ஆற்காடு குப்பம், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப் பகுதியில் நெல், சோளம், மக்காச் சோளம், கரும்பு, மா, கொய்யா, வாழை உள்ளிட்டவை பயிர் செய்யப்படுகின்றன.

இப் பகுதி விவசாயிகள் பெரும்பாலானோர் மழை நீரை நம்பியும், குசஸ்தலை ஆற்று நீரை நம்பியும் விவசாயம் செய்து வருகின்றனர்.  இந்நிலையில் இப் பகுதியில் இந்த ஆண்டும் மழை குறைவாகவே பெய்ததால் குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தற்போது வறண்டு காணப்படுகின்றன.

  இப் பகுதியில் குசஸ்தலை ஆற்றில் தண்ணீர் கடுகளவு கூட இல்லை. பல ஆண்டுகளாகவே மழைக்குறைவு காரணமாக ஆறு வறண்டு விடுவதால் இப்பகுதியில் குடிநீர் ஆதாரம் பாதிக்குமோ என்ற பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

மழை குறைந்ததால் மா, துவரம் போன்ற விவசாயப் பயிர்களில் பூக்கள் சரிவரப் பூக்கவில்லை.

அப்படி சில மரங்களில் பூத்த பூக்களும் கடும் வெயிலால் உதிர்ந்து வருகின்றன. இதனால் இந்த ஆண்டு மாம்பழ உற்பத்தி குறைவாகவே இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில் போர்வெல் மூலம் கடந்த மாதங்களில் பயிர் செய்த விவசாயப் பயிர்களும் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன.

 மின் பற்றாக்குறை காரணமாக நகர்ப் பகுதியில் 3 மணி நேரம் மின்விநியோகம் தடை செய்யப்படும் நிலையில் கிராமப் பகுதியில் கணக்கு வழக்கு இல்லாமல் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.