திறந்தவெளியில் வீணாகும் 1 லட்சம் டன் நெல் மூட்டைகள்

ஒசூர்: ஒசூரில் அந்திவாடி திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சுமார் 1 லட்சம் டன் நெல் மூட்டைகள், மழையிலும், வெயிலிலும் சேதமடைந்து வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதம்தோறும் 15 ஆயிரம் டன் ரேஷன்
திறந்தவெளியில் வீணாகும் 1 லட்சம் டன் நெல் மூட்டைகள்
Updated on
1 min read

ஒசூர்: ஒசூரில் அந்திவாடி திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சுமார் 1 லட்சம் டன் நெல் மூட்டைகள், மழையிலும், வெயிலிலும் சேதமடைந்து வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதம்தோறும் 15 ஆயிரம் டன் ரேஷன் அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் வாங்கி உள்ளூரில் அரவை செய்து அரிசி மூட்டைகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

தமிழ்நாடு வாணிபக் கழகம் கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு ரேஷன் அரிசிக்காக அதிக அளவில் நெல் கொள்முதல் செய்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பிற மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளுக்கு அனுப்பப்படுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர்-தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளில் நியாயவிலை கடைகளுக்கு அனுப்ப வேண்டிய ரேஷன் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்கள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன.

அங்கு போதிய இடவசதி இல்லாததால், புதியதாக கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அங்கு வைக்க முடியவில்லை.இந்நிலையில், ஒசூர் தளி சாலையில் உள்ள அந்திவாடி திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் டன் நெல் மூட்டைகள் டெல்டா பகுதியில் இருந்து வாங்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நெல் மூட்டைகள் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, தளி, ஒசூர், வேப்பனப்பள்ளி, பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள 21 தனியார் அரிசி ஆலைகள் மூலம் அரவை செய்து ரேஷன் கடைகளுக்கான அரிசி அனுப்பப்படுகிறது.

திறந்தவெளியில் சேமிக்கப்பட்டு வரும் நெல் மூட்டைகள் பெயரளவில் பிளாஸ்டிக் தார்பாய்கள் மூலம் மூடப்பட்டுள்ளன. இவை பலத்த காற்றுடன் மழை பெய்யும்போது சேதமடைந்து, நெல் மூட்டைகள் நனைந்து விடுகின்றன. அப்படி நனைந்துவிடும் நெல் பல நேரங்களில் முளைக்கட்டி விடுகிறது. இதுகுறித்து வாணிபக் கிடங்கு கண்காணிப்பாளர் வெங்கடேஷ் கூறியது:

இம்மாவட்டத்துக்கு மாதத்துக்கு 15 ஆயிரம் டன் ரேஷன் அரிசி தேவை. அதிக எண்ணிக்கையிலான நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கு போதுமான கிடங்கு வசதி இங்கே இல்லை. இதனால் அந்திவாடி விளையாட்டு மைதானத்தில் அடுக்கி வைக்கப்படுகின்றன. தற்போது 1 லட்சம் டன் நெல் மூட்டைகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com